திண்டுக்கல்: நிர்மலா தேவி என்ற பெண் பட்டப்பகலில் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில், ஒரே நாளில் வெவ்வேறு இடங்களில் எட்டு பேர் சிக்கினர்.
திண்டுக்கல்-மதுரை தேசிய நெடுஞ்சாலையில் பதுங்கி இருந்த மூவரை போலிசார் கைது செய்த நிலையில், இந்த வழக்கு தொடர்பாக திருச்சி நீதிமன்றத்தில் ஐவர் நேற்று முன்தினம் சரணடைந்தனர்.
தேவேந்திர குல வேளாளர் கூட்டமைப்பின் தலைவராக இருந்த பசுபதி பாண்டியன் என்பவர் கடந்த 2012ல் திண்டுக்கல் மாவட்டம் அருகே உள்ள நத்தவனப்பட்டியில் கொலை செய்யப்பட்டார்.
இந்தக் கொலை சம்பவத்துக்கு நிர்மலா தேவி உடந்தையாக இருந்த தாகவும் கூறப்பட்டது.
இந்நிலையில், பசுபதிபாண்டியன் கொலையில் 5வது குற்றவாளியாகச் சேர்க்கப்பட்டிருந்த நிர்மலா தேவி, கடந்த 22ஆம் தேதி அடையாளம் தெரியாத சிலரால் தலை துண்டிக்கப்பட்டு கொல்லப்பட்டார்.
திண்டுக்கல்-மதுரை தேசிய நெடுஞ்சாலையில் பதுங்கி இருந்த மூவர் சிக்கிய நிலையில், அவர்களை திண்டுக்கல் குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் முன்னிலைப் படுத்தியதைத் தொடர்ந்து மூவரை யும் 15 நாள் நீதிமன்றக் காவலில் வைக்க நீதிபதி உத்தரவிட்டார்.
இதற்கிடையே, நிர்மலா தேவி கொலை சம்பவத்தில் ஈடுபட்ட மேலும் ஐவர் திருச்சி குற்றவியல் நீதிமன்றத்தில் சரணடைந்தனர். இவர்களை நீதிமன்றக் காவலில் வைக்குமாறு மாஜிஸ்திரேட் குமார் உத்தரவிட்டுள்ளார்.