நிர்மலா தேவி கொலை வழக்கில் எட்டு பேர் கைது

திண்­டுக்­கல்: நிர்­மலா தேவி என்ற பெண் பட்­டப்­ப­க­லில் படு­கொலை செய்­யப்­பட்ட சம்­ப­வம் தொடர்­பில், ஒரே நாளில் வெவ்­வேறு இடங்­களில் எட்டு பேர் சிக்­கி­னர்.

திண்­டுக்­கல்-மதுரை தேசிய நெடுஞ்­சா­லை­யில் பதுங்கி இருந்த மூவரை போலி­சார் கைது செய்த நிலை­யில், இந்த வழக்கு தொடர்­பாக திருச்சி நீதி­மன்­றத்­தில் ஐவர் நேற்று முன்­தி­னம் சர­ண­டைந்­த­னர்.

தேவேந்­திர குல வேளா­ளர் கூட்­ட­மைப்­பின் தலை­வ­ராக இருந்த பசு­பதி பாண்­டி­யன் என்­ப­வர் கடந்த 2012ல் திண்­டுக்­கல் மாவட்­டம் அருகே உள்ள நத்­த­வ­னப்­பட்­டி­யில் கொலை செய்­யப்­பட்­டார்.

இந்­தக் கொலை சம்­ப­வத்­துக்கு நிர்­மலா தேவி உடந்­தை­யாக இருந்த தாக­வும் கூறப்­பட்­டது.

இந்­நி­லை­யில், பசு­ப­தி­பாண்­டி­யன் கொலையில் 5வது குற்­ற­வாளியாகச் சேர்க்­கப்­பட்­டி­ருந்த நிர்­மலா தேவி, கடந்த 22ஆம் தேதி அடையாளம் தெரி­யாத சில­ரால் தலை துண்­டிக்­கப்­பட்டு கொல்­லப்­பட்­டார்.

திண்டுக்கல்-மதுரை தேசிய நெடுஞ்சாலையில் பதுங்கி இருந்த மூவர் சிக்கிய நிலையில், அவர்களை திண்டுக்கல் குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் முன்னிலைப் படுத்தியதைத் தொடர்ந்து மூவரை யும் 15 நாள் நீதிமன்றக் காவலில் வைக்க நீதிபதி உத்தரவிட்டார்.

இதற்கிடையே, நிர்மலா தேவி கொலை சம்பவத்தில் ஈடுபட்ட மேலும் ஐவர் திருச்சி குற்றவியல் நீதிமன்றத்தில் சரணடைந்தனர். இவர்களை நீதிமன்றக் காவலில் வைக்குமாறு மாஜிஸ்திரேட் குமார் உத்தரவிட்டுள்ளார்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!