பெரிடோரியா: புதிய உருமாறிய ஓமிக்ரான் தொற்று தென்னாப்பிரிக்காவில் முன்னெப்போதும் இல்லாத அளவிற்கு வேகமாக பரவுவதாக தென்னாப்பிரிக்க அதிபர் சிரில் ராமபோசா கூறினார்.
ஆனால் மற்ற உருமாறிய கிருமி களைக் காட்டிலும் ஓமிக்ரானால் ஏற்படக்கூடிய பாதிப்பு குறைவாக இருக்கக்கூடும் என்று முதற்கட்ட ஆய்வுகள் காட்டுவதாகவும் அவர் தெரிவித்தார்.
மருத்துவர்களும் சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு வரும் நோயாளிகள் கடுமையாக பாதிக்கப்பட்டிருக்கவில்லை என்றனர்.
இதற்கிடையே, தென்னாப்பிரிக்க மாணவர்களுக்குக் கிருமி தொற்றிவிடுமோ என்ற அச்சத்தைவிட தேர்வுகள் நடைபெறு வதில் ஏதாவது குளறுபடி ஏற்பட்டு விடுமோ என்ற கவலைதான் மேலோங்கி உள்ளது.
பெரிடோரியாவில் உள்ள ஷ்வானி தொழில்நுட்ப பல்கலைக்கழகத்தில் பயிலும் கிட்டத்திட்ட 30 மாணவர்களிடம் ராய்ட்டர்ஸ் ஊடகம் நேர்காணல் நடத்தியது. அப்போது பெரும்பாலானோர் வகுப்புகள் மீண்டும் தடைபட்டு விடுமோ என கவலை தெரிவித்தனர்.
"மீண்டும் இணைய வழி கல்வி என்றால் மிகவும் கடினமாகி
விடும். சில நேரங்களில் இணைய இணைப்பு வேலை செய்யாது," என்றார் 21 வயது மாணவர்.
இதற்கிடையே, பெரியவர்
களைப் போல் இளம் வயதினரும் மோசமாக பாதிக்கப்படுவதாக தரவுகள் கூறுகின்றன.
அங்கு தடுப்பூசி போட்டுக்கொண்டுள்ள இளம் வயதினர் எண்ணிக்கை மிகவும் குறைவாகும். 18 முதல் 34 வயதுக்கு இடைபட்டவர்களில் ஐந்தில் ஒரு பங்கினர் மட்டுமே தடுப்பூசி போட்டுக் கொண்டுள்ளனர்.