கொவிட்-19 தடுப்பூசிக்குப் பதிவு செய்துள்ள சிறுவர்கள் தங்களுடைய உடன்பிறந்தோருடன் ஒன்றாக தடுப்பூசி போட்டுக் கொள்வதற்காக புதிய ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இனி தனித்தனியாக தடுப்பூசிக்குப் பதிந்துகொள்ள வேண்டிய அவசியமிருக்காது.
இம்மாதம் 10ஆம் தேதியில் இருந்து இந்தப் புதிய ஏற்பாடு நடைமுறைக்கு வருகிறது என்று கல்வி அமைச்சு நேற்று தெரிவித்தது. சிறார்களுக்கான தடுப்பூசி நிலையங்களில் வார நாட்களில் திங்கள் முதல் வியாழன் வரை உடன்பிறந்தோர் ஒன்றாக தடுப்பூசி போட்டுக் கொள்ளலாம் என்று அது கூறியது.
ஒன்றுக்கு மேற்பட்ட சிறார்களின் பெற்றோருக்கும் காப்பாளர் களுக்கும் புதிய ஏற்பாடு வசதியாக இருக்கும் என்று நேற்று வெளியிட்ட அறிக்கையில் அமைச்சு தெரிவித்தது.
இந்த ஏற்பாட்டின் மூலம் பெற்றோர் அல்லது காப்பாளர்கள் தங்களுடைய பிள்ளைகளுக்குத் தடுப்பூசி போட விரும்பினால் இரவு ஏழு மணிக்குள் தடுப்பூசி நிலையத்துக்கு வர வேண்டும். தடுப்பூசி போடும் அனைத்து சிறுவர்களின் மாணவர் அடையாள அட்டை அல்லது பிறப்புச் சான்றிதழ், கடவுச்சீட்டு, சிங்பாஸ் போன்ற இதர அடையாள ஆவணங்களைக் கொண்டு வருவது அவசியம்.
உடன்பிறந்தவர்கள் தனித்தனி யாக தடுப்பூசிக்கு முன்பதிவு செய்திருந்தால் அவற்றில் ஒன்றை ரத்து செய்து ஒரே நேரத்தில் தடுப்பூசி போட்டுக்கொள்வதை ஊக்குவிக்கிறோம் என்று அமைச்சு தெரிவித்தது.
தேசிய தடுப்பூசி முன்பதிவு இணையத்தளம் வழியாக இதனைச் செய்ய முடியும்.
அடுத்த சில வாரங்களில் தடுப்பூசிக்கு அதிகமானோர் பதிவு செய்துள்ளதால் வெள்ளிக்கிழமை முதல் ஞாயிறு வரை உடன்பிறந்தோர் ஒன்றாக தடுப்பூசி போட்டுக் கொள்ள முடியாது.
நேற்று மேலும் ஏழு சிறார்களுக்கான தடுப்பூசி நிலையங்கள் தொடங்கப்பட்டன. இவற்றுடன் சேர்த்து சிறுவர்களுக்கான தடுப்பூசி நிலையங்களின் எண்ணிக்கை 14க்கு அதிகரித்துள்ளது. கடந்த மாதம் 27ஆம் தேதி ஏழு நிலையங்கள் செயல்படத் தொடங்கின.
இந்நிலையில் 15வது சிறுவர் களுக்கான தடுப்பூசி நிலையமும் இம்மாதம் 11ஆம் தேதி யூசோஃப் இஷாக் உயர்நிலைப் பள்ளியில் தொடங்கப்படுகிறது.
இவ்வேளையில் புதிய ஏற்பாட்டின் மூலம் மாணவர்களுக்குத் தடுப்பூசி போட விரும்பும் பெற்றோர் அல்லது காப்பாளர்கள் பள்ளிக்கு மாைல ஏழு மணிக்குப் பதிலாக ஐந்து மணிக்கே வர வேண்டும் என்று கல்வி அமைச்ச நினைவூட்டியுள்ளது.