பெர்த்: இந்தியா-ஆஸ்திரேலியா தொடர் விறுவிறுப்பானதாக இருக்கும் என்று இருதரப்பினரும் அடித்துக் கூறுகின்றனர். ஆஸ்திரேலியா அணிக்கு எதிராக ஐந்து போட்டிகள் கொண்ட ஒருநாள் மற்றும் மூன்று போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடுவதற்காக இந்திய அணி ஆஸ்திரேலியா சென்றுள்ளது. இரு அணிகளுக்கும் இடை யிலான ஒருநாள் தொடர் பெர்த்தில் நாளை மறுநாள் தொடங்குகிறது.
இந்தத் தொடர் குறித்து இந்திய அணியின் தொடக்க ஆட்டக்காரர் ரோகித் சர்மா கருத்து தெரிவித்துள்ளார். "இந்தத் தொடர் நெருப்புடன் நெருப்பு மோதுவது போன்றது. இரண்டு அணிகளும் எதிரெதிரே மோதிய வரலாற்றைப் பார்த்தால் ஒவ்வோர் அணியும் வெற்றி பெற வேண்டும் என விரும்பி மிகுந்த முனைப்புடன் விளையாடியது தெரியும். "2014ஆம் ஆண்டு ஆஸ்தி ரேலிய மண்ணில் விளையாடிய போது தொடரைக் கைப்பற்ற மிகவும் நெருங்கி வந்தோம். எனினும், கடைசி வரை சரியாகப் போட்டியிட்டும் தொடரைக் கைப்பற்ற முடியாமல் போனது," என்று ரோகித் சர்மா தெரிவித்தார்.