சிங்கப்பூர் தேசியப் பல்கலைக்கழகத்தின் பொறியியல் மாணவர்கள் மின்சாரத்தில் இயங்கும் சிங்கப்பூரின் முதல் பந்தய காரை உருவாக்கியுள்ளனர்.
இந்த காரின் இயந்திரத்தை இயக்கத் தொடங்கிய 3.9 விநாடிகளில் மணிக்கு 100 கிலோமீட்டர் வேகத்தை எட்டும் என்று கூறப்படுகிறது.
'டெஸ்லா', 'ஆடி' உள்ளிட்ட சில மின்சார கார்கள் இத்தகைய வேகத்தை எட்டும் என்று தகவல்கள் கூறுகின்றன. 'ஆர்22இ' என்று அழைக்கப்படும் இந்த காரை போக்கு வரத்து மூத்த துணையமைச்சர் சீ ஹொங் டாட் நேற்று அதிகாரபூர்வமாக அறிமுகப்படுத்தினார். இதன் அதிகபட்ச வேகம் மணிக்கு 125.4 கிலோமீட்டர் என்று தெரிவிக்கப்பட்டது.