முக்கிய உள்கட்டமைப்புகளை இயக்கும் கட்டுப்பாட்டு முறையை அரசாங்கங்களும் அமைப்புகளும் புதுப்பித்து, மறுவடிவமைக்க வேண்டும் என்று இணையப் பாதுகாப்பு நிபுணர்கள் கூறியுள்ளனர். இத்தகைய முறைக்கு தீங்கு விளைவிக்க முற்படும் இணையப் பாதுகாப்பு மிரட்டல்களை எதிர்கொள்வது இந்த ஏற்பாட்டின் நோக்கம் என்று அவர்கள் கருதுகின்றனர்.
நேற்று நடைபெற்ற இணையப் பாதுகாப்பு கருத்தரங்கு ஒன்றில் இந்தக் கருத்து முன்வைக்கப்பட்டது.
இந்தக் கருத்தரங்கில் தொடர்பு, தகவல் அமைச்சர் ஜோசஃபின் டியோவும் கலந்துகொண்டு பேசினார். சில இணையத் தாக்குதல்கள், மக்களிடம் நேரடியாக தீங்கு விளைவிக்கும் நோக்கத்துடன் நடத்தப்படுவதை அவர் சுட்டினார்.
எடுத்துக்காட்டாக, 2020 ஏப்ரலில் இஸ்ரேலில் உள்ள பல்வேறு நீர் வசதிகளில் இணையத் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டது. குளோரின் அளவை அபாயகரமான நிலைக்கு உயர்த்தி பரவலாக விஷத்தன்மையை ஏற்படுத்துவது அதன் நோக்கம்.