கம்பனை உலகின் தலைசிறந்த கவிஞர்களில் ஒருவராகப் பேராசிரியர் ஜார்ஜ் ஹார்ட் கருதுகிறார். அதைப் பற்றி வரும் சனிக்கிழமையன்று அவர் உரையாற்றவுள்ளார்.
இந்தியக் காப்பியமான ராமாயணத்தை வழங்கியவர் வால்மீகி. அதைத் தமிழர்களுக்கு உகந்த வகையில் படைத்த பெருமை கம்பனைச் சேரும்.
கம்ப ராமாயணம் மேற்கத்தியக் காப்பியங்களுக்கு நிகரானது என்பதைப் பேராசிரியர் ஜார்ஜ் விளக்கவுள்ளார்.
இந்நிகழ்வு சிங்கப்பூர் நேரப்படி வரும் சனிக்கிழமையன்று இரவு எட்டு மணியிலிருந்து ஒன்பதரை மணிவரை நடைபெறும். சிங்கப்பூர்த் தமிழ்ப் பண்பாட்டு மையமும் தேசிய நூலக வாரியமும் இணைந்து வழங்கும் இதில் ஸூம் செயலி வழி மெய்நிகரில் கலந்துகொள்ளலாம்.
ஸூம் சந்திப்பு எண்: 96761536357 கடவுச்சொல்: 497906