100க்கு மேற்பட்ட சிங்கப்பூர் ஏர்லைன்ஸ், சில்க்ஏர் விமானச் சேவைகள் ரத்து

சிங்கப்பூருக்கும் இந்தோனீசியா, ஜப்பான், தென்கொரியா, ஜெர்மனி, அமெரிக்கா போன்ற நாடுகளுக்கும் இடையிலான, மார்ச் முதல் மே மாதம் வரையிலான 100க்கு மேற்பட்ட சிங்கப்பூர் ஏர்லைன்ஸ், சில்க்ஏர் விமானச் சேவைகள் ரத்து செய்யப்பட்டுள்ளன.

‘கொவிட்-19’ எனப்படும் கொரோனா கிருமித்தொற்றுப் பரவல் அச்சம் காரணமாக அந்தக் காலகட்டத்தில் விமானச் சேவைகளுக்கான தேவை குறைந்திருப்பதால் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

பாதிக்கப்பட்ட வாடிக்கையாளர்களுக்கு தகவல் தெரிவிக்கப்படுவதுடன், அவர்கள் வேறு விமானச் சேவைகளைப் பயன்படுத்த ஏற்பாடு செய்யப்படும் என்று அது தெரிவித்தது.

இவ்வாறு பாதிக்கப்படும் முதல் சேவை சிங்கப்பூரிலிருந்து ஜகார்த்தாவுக்கு மார்ச் மாதம் 3ஆம் தேதி செல்லும் விமானச் சேவையாகும்.

இந்தத் தகவலை சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் நிறுவனம் தனது இணையப்பக்கம், ஃபேஸ்புக் பக்கம் ஆகியவற்றின் வழியாக அறிவித்துள்ளது. கூடுதல் விவரங்கள் அங்கு அளிக்கப்பட்டுள்ளன.

நிலைமையை அணுக்கமாகக் கண்காணித்து சூழ்நிலைக்கேற்ப மாற்றங்கள் செய்யப்படும் என்று சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் நிறுவனம் தெரிவித்தது.

#SIA #SilkAir #Corona #Flights cancel #தமிழ்முரசு

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!