பட்ஜெட் 2020: கடல் நீர்மட்டம் உயர்கிறது, சிங்கப்பூரைக் காக்க புதிய நிதியில் $5 பில்லியன்

கடல் நீர்மட்டம் உயர்வதால் சிங்கப்பூருக்கு ஏற்படக்கூடிய பாதிப்புகளைத் தவிர்த்துக்கொண்டு சிங்கப்பூரைப் பாதுகாக்கும் நோக்கத்துடன் புதிய நிதி ஒன்று அறிவிக்கப்பட்டு உள்ளது.

கடலோர மற்றும் வெள்ளப் பாதுகாப்பு நிதி (Coastal and Flood Protection Fund) என்ற அந்த நிதியில் தொடக்கமாக $5 பில்லியன் ஒதுக்கப்படும். தொடர்ந்து அந்த நிதியில் அதிகத் தொகை சேர்க்கப்படும் என்று நிதி அமைச்சர் ஹெங் சுவீ கியட் தெரிவித்தார்.

பருவநிலை மாற்றம் காரணமாக கடல் நீர்மட்டம் உயர்ந்து வருகிறது. அதனால் சிங்கப்பூருக்குப் பாதிப்பு ஏற்படக்கூடும்.

அந்தப் பாதிப்பில் இருந்து சிங்கப்பூரைக் காக்க அடுத்த 100 ஆண்டு காலத்தில் $100 பில்லியன் அல்லது அதற்கும் அதிகத் தொகை தேவைப்படும் என்று பிரதமர் லீ சியன் லூங் தனது தேசிய நாள் பேரணி உரையில் தெரிவித்து இருந்ததை துணைப் பிரதமரான திரு ஹெங் வரவுசெலவுத் திட்ட உரையில் சுட்டினார்.

வரவுசெலவுத் திட்டத்தின் மேலும் விரிவான செய்திகளுக்கு நாளைய (பிப்ரவரி 19) தமிழ்முரசின் அச்சுப் பிரதியை நாடுங்கள்!

#தமிழ்முரசு #Coastal and Flood Protection Fund #Budget

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!