மார்சிலிங் லேன் 3ல் உள்ள வீவக வீட்டில் நேற்றுத் தீ மூண்டதில் வரவேற்பு அறையில் இருந்த பொருட்கள் சேதமடைந்தன. நீர் பீய்ச்சியடிக்கும் இயந்திரத்தைக் கொண்டு தீ அணைக்கப்பட்டதாக குடிமைத் தற்காப்புப் படை தெரிவித்தது. மேலும் புளோக்கிலிருந்து 20 குடியிருப்பாளர்கள் வெளியேற்றப்பட்டதாகவும் அது கூறியது.
மார்சிலிங் டிரைவ் புளோக் 215ல் வீடு தீப்பற்றி எரிந்ததில் வரவேற்பு அறையில் இருந்த பொருட்கள் நாசமடைந்தன. படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்