சுதாஸகி ராமன்
பூக்களால் செய்யப்பட்ட இரண்டு மயில்கள் தோகையை விரித்தாட நடுவிலே வண்ண விளக்குகளால் மிளிரும் அழகிய தாமரைகள் இவ் வாண்டு தீபாவளி காலத்தின்போது லிட்டில் இந்தியா வட்டாரத்தையே ஒளியூட்டவுள்ளன. இம்மாதம் 17ஆம் தேதி அன்று சிராங்கூன் பிளாஸாவிற்கு எதிரில் உள்ள திடலில் அதிபர் டோனி டான் கெங் யாம் ஒளியூட்டு விழாவில் கலந்துகொண்டு லிட்டில் இந்தியாவை ஒளி வெள்ளத்தில் மிதக்க வைக்க உள்ளார்.
புக்கிட் தீமா சாலையில் தொடங்கி லாவண்டர் சாலை வரை உள்ள சிராங்கூன் ரோடு பகுதிகள் இம்மாதம் 17ஆம் தேதி முதல் நவம்பர் 12ஆம் தேதி வரை அலங்கார விளக்குகளால் ஒளி யூட்டப்படும். ஒளியூட்டு விழாவில் உள்ளூர் கலைஞர்களுடன் பிரபல தமிழ் திரைப்பட நட்சத்திரங்களான சமந் தா, குஷ்பு ஆகியவர்களும் பங் கேற்று ஆடிப்பாடி பார்வையாளர் களை மகிழவைக்கவுள்ளனர்.
இம்மாதம் 17ஆம் தேதி முதல் சிராங்கூன் ரோடு நெடுகிலும் அழகிய வேலைப்பாடுகளுடன் அலங்காரங்கள் ஒளியூட்டப்படும். படம்: லிட்டில் இந்தியா கடைக்காரர்கள், மரபுடைமைச் சங்கம்