எதிர்கால தலைமுறைகளைச் சேர்ந்த சிங்கப்பூரர்கள் இப்போது இருப்பதை விட இன்னும் பின்னிப்பிணைந்து இருப்பார்கள். இனப் பாகுபாடு அவ் வளவாக இருக்காது. அந்தச் சிங் கப்பூரர்களை இன அடிப்படையில் வகைப்படுத்த வேண்டிய தேவை இல் லாமல் போகக்கூடும் என்று தற்காலிக கல்வி அமைச்சர் (உயர்கல்வி, திறன் கள்) ஓங் யி காங் நேற்று செம்பவாங் கில் நடந்த இளையர் கலந்துரையாடல் கூட்டம் ஒன்றில் தெரிவித்தார். ஆனால் இப்போதைய நிலவரத் திலிருந்து பார்க்கையில் அத்தகைய ஒரு நிலைக்கு நாம் வர அதிக நாளா கும் என்றார் அவர்.
இனப் பாகுபாட்டை எப்படி சமா ளிப்பது என்றும் சீன, மலாய், இந்திய, மற்றவர்கள் என்று இன அடிப்படை யிலான வகைப்பாட்டின் பயன்கள் பற்றியும் அக்கூட்டத்தில் இரண்டு மாணவர்கள் கேள்வி எழுப்பினார்கள். அவர்களுக்குப் பதிலளித்த அமைச்சர், ஒவ்வொரு தலைமுறை யிலும் அதிகமாக நாம் பின்னிப் பிணைந்து வருவதாகவும் இளம் தலைமுறையினரிடையே இனப் பாகு பாடு குறைந்து வருவதையும் சுட்டிக் காட்டினார். இருந்தாலும் ஒருவரின் இனத்தை யும் கலாசார மரபையும் நினைவில் கொள்ளவேண்டியது முக்கியமானது என்று செம்பவாங் குழுத்தொகுதி நாடாளுமன்ற உறுப்பினருமான அவர் தெரிவித்தார்.
'இளையர்களின் குரல்' என்ற செம்பவாங் குழுத்தொகுதி கலந்துரையாடல் கூட்டம் நேற்று நடந்தது. போக்குவரத்து அமைச்சர் கோ பூன் வான், தற்காலிக கல்வி அமைச்சர் (உயர்கல்வி, திறன்கள்) ஓங் யி காங், அம்ரின் அமின், விக்ரம் நாயர் ஆகியோர் இளையர்களின் கருத்துகளைச் செவிமடுக்கிறார்கள். படம்: பெரித்தா ஹரியான்