'வோல்பாக்கியா' கிருமியைச் சுமந்துச் செல்லும் ஆண் 'ஏடிஸ் எஜிப்டி' கொசுக்களைப் பயன் படுத்தி டெங்கி பரவலைத் தடுக்க சிங்கப்பூரின் மூன்று பகுதிகளில் கடந்த ஆண்டு நடத்தப்பட்ட ஆய்வு நல்ல முடிவையும் பயனுள்ள அரிய தகவல்களையும் அளித்து உள்ளது. தெம்பனிஸ் வெஸ்ட் பகுதியில் இத்தகைய கொசுக்கள் விடப்பட்ட மூன்று மாதங்களுக்குப் பிறகு, அந்தப் பகுதியில் சேகரிக்கப்பட்ட ஏடிஸ் கொசுக்களின் எண் ணிக்கை பாதி அளவு குறைந்து உள்ளது என்று தேசிய சுற்றுப்புற வாரியம் நேற்று தெரிவித்தது. விடப்பட்ட 'வோல்பாக்கியா' ஆண் 'ஏடிஸ் எஜிப்டி' கொசுக்கள் அங்குள்ள 'ஏடிஸ்' கொசுக்களு டன் வெற்றிகரமாக உறவு கொண் டது என்று இந்த ஆய்வில் தெரிய வந்துள்ளது.2017-02-09 06:00:00 +0800
சிங்கப்பூரில் கொசுக்கள் எண்ணிக்கையைக் குறைக்கும் முயற்சியாக கடந்த ஆண்டு அக்டோபர் மாதத்தில் பிராடல் ஹைட்ஸில் சுமார் 3,000 'வோல்பாக்கியா' கொசுக்கள் விடப்பட்டன. படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்