எட்டுப் பேர் சிக்கினர்; கள்ள சிகரெட்டுகள் பறிமுதல்

சிங்கப்பூர் சுங்கத்துறை அதிகாரி கள், எட்டுப் பேரைக் கைதுசெய்து இருக்கிறார்கள். அவர்களிடம் இருந்து 5,000க்கும் அதிக பெட்டி (கார்ட்டன்) கள்ள சிகரெட்டுகளை அவர்கள் பறிமுதல் செய்தனர். அந்த சிகரெட்டுக்கு கட்ட வேண்டிய ஜிஎஸ்டி வரியும் தீர்வையும் முறையே, $32,180 மற்றும் $439,280 ஆகும். கைதா னவர்களில் ஐந்து பேர் சிங்கப் பூரர்கள். மூவர் மலேசியர்கள். அவர்களுக்கு வயது 21 முதல் 59 வரை.

காக்கி புக்கிட் அவென்யூ 4ல் இருக்கும் தொழில்பேட்டைக் கட்ட டம் ஒன்றில் உள்ள மோட்டார் பட்டறை ஒன்றைச் செவ்வாய்க் கிழமை சுங்கத்துறை அதிகாரி கள் கவனித்து வந்தார்கள். அந்தப் பட்டறை, கள்ள சிக ரெட்டுகளைப் பதுக்கி வைத்து விநியோகம் செய்யும் இடம் என்று சந்தேகிக்கப்பட்டது. அதை அதிகாரிகள் சோதனை யிட்டனர். மொத்தம் 5,120 பெட்டி களில் இருந்த சிகரெட்டுகளும் நான்கு பெரிய சிகரெட்டுப் பொட்ட லங்களும் பிடிபட்டன.

அந்தப் பட்டறைக்குள் முன்ன தாக வந்திருந்த சிங்கப்பூர் பதிவு பெற்ற வாகனத்தையும் அதிகாரி கள் பறிமுதல் செய்தனர். அதோடு மலேசியாவில் பதிவுபெற்ற இரண்டு கார்களையும் அவர்கள் கைப்பற்றினார்கள். அந்தப் பட்டறையில் ஆறு பேர் கைதுசெய்யப்பட்டனர். சிங்கப் பூரைவிட்டுத் தப்பிச் செல்ல முயன்ற இரண்டு பேர் உட்லண்ட்ஸ் சோதனைச்சவாடியில் அதிகாரி களிடம் பிடிபட்டனர்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!