சிங்கப்பூர் சுங்கத்துறை அதிகாரி கள், எட்டுப் பேரைக் கைதுசெய்து இருக்கிறார்கள். அவர்களிடம் இருந்து 5,000க்கும் அதிக பெட்டி (கார்ட்டன்) கள்ள சிகரெட்டுகளை அவர்கள் பறிமுதல் செய்தனர். அந்த சிகரெட்டுக்கு கட்ட வேண்டிய ஜிஎஸ்டி வரியும் தீர்வையும் முறையே, $32,180 மற்றும் $439,280 ஆகும். கைதா னவர்களில் ஐந்து பேர் சிங்கப் பூரர்கள். மூவர் மலேசியர்கள். அவர்களுக்கு வயது 21 முதல் 59 வரை.
காக்கி புக்கிட் அவென்யூ 4ல் இருக்கும் தொழில்பேட்டைக் கட்ட டம் ஒன்றில் உள்ள மோட்டார் பட்டறை ஒன்றைச் செவ்வாய்க் கிழமை சுங்கத்துறை அதிகாரி கள் கவனித்து வந்தார்கள். அந்தப் பட்டறை, கள்ள சிக ரெட்டுகளைப் பதுக்கி வைத்து விநியோகம் செய்யும் இடம் என்று சந்தேகிக்கப்பட்டது. அதை அதிகாரிகள் சோதனை யிட்டனர். மொத்தம் 5,120 பெட்டி களில் இருந்த சிகரெட்டுகளும் நான்கு பெரிய சிகரெட்டுப் பொட்ட லங்களும் பிடிபட்டன.
அந்தப் பட்டறைக்குள் முன்ன தாக வந்திருந்த சிங்கப்பூர் பதிவு பெற்ற வாகனத்தையும் அதிகாரி கள் பறிமுதல் செய்தனர். அதோடு மலேசியாவில் பதிவுபெற்ற இரண்டு கார்களையும் அவர்கள் கைப்பற்றினார்கள். அந்தப் பட்டறையில் ஆறு பேர் கைதுசெய்யப்பட்டனர். சிங்கப் பூரைவிட்டுத் தப்பிச் செல்ல முயன்ற இரண்டு பேர் உட்லண்ட்ஸ் சோதனைச்சவாடியில் அதிகாரி களிடம் பிடிபட்டனர்.