தேசிய தொழிற்சங்கக் காங்கிரசின் (என்டியுசி) தலைமைச் செயலாள ராக இங் சீ மெங் அதிகாரபூர்வ மாக நியமிக்கப்பட்டுள்ளார். திரு சான் சுன் சிங்கிடமிருந்து அந்தப் பொறுப்பை அவர் எடுத்துக் கொண்டு இருக்கிறார். அண்மைய அமைச்சரவை மாற் றத்தின்போது வர்த்தக தொழில் அமைச்சராக நியமிக்கப்பட்ட திரு சான், நேற்று மே 22ஆம் தேதி என்டியுசியில் தான் வகித்து வந்த பொறுப்பில் இருந்து விலகிக் கொண்டார். என்டியுசி அறிக்கை ஒன்றில் இந்த விவரங்களைத் தெரிவித்தது.
என்டியுசியின் மத்திய செயற்குழு நேற்று பிற்பகலில் கூடியதாகவும் அந்தக் குழு திரு சானின் பதவி விலகலை ஏற்றுக்கொண்டு அவ ருக்குப் பதிலாக ஏகமனதாக திரு இங்கை தேர்ந்தெடுத்ததாகவும் அறிக்கை குறிப்பிட்டது. திரு இங்கும் வர்த்தக தொழில் மூத்த துணை அமைச்சரான கோ போ கூனும் ஏப்ரல் 23ஆம் தேதி தொழிலாளர் இயக்கத்தின் துணைத் தலைமைச் செயலாளர் களாக நியமிக்கப்பட்டனர்.
திரு சான் சுன் சிங்கிடமிருந்து என்டியுசி தலை மைச் செயலாளர் பொறுப்பை ஏற்றுக் கொள்ளும் திரு இங் சீ மெங். (இடது). படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்