சிங்கப்பூரில் நீரிழிவு நோய்க்கு எதிரான போராட்டத்தில் எங்கும் குடிநீரும் சர்க்கரை வரியும் இடம் பெறக்கூடிய வாய்ப்பு இருக்கிறது. சுகாதார அமைச்சர் கான் கிம் யோங், மக்கள் இனிப்பு பானத்தைக் கைவிட்டுவிட்டு தண்ணீரைக் குடிக்க நாடெங்கும் வசதிகள் இருக்கவேண்டும் என்று விரும்புகிறார். அரசாங்க மற்றும் மக்கள் கழக நிகழ்ச்சிகள் அனைத்திலும் இந்த மாதம் முதல் தண்ணீர் வழங்கப்படவேண்டும் என்று அவர் விருப்பம் தெரிவித்து இருக்கிறார்.
"இதுவரையில் காபி, தேநீர் பானமே வழங்கப்படும். தண்ணீர் கேட்டால் போத்தலில் உள்ள தண்ணீரைத் தருவார்கள்," என் றார் அவர். பொது இடங்களில் தாராளமாகக் குடிநீர்ப் புழங்க வேண்டும் என்று அமைச்சர் விருப்பம் தெரிவித்துள்ளார். இதன் தொடர்பில் தேசிய சுற்றுப்புற வாரியம், தேசிய பூங்கா வாரியம் ஆகியவற்றுடன் திரு கான் சேர்ந்து செயல்பட்டு வருகிறார்.