ஆபாசப் படங்களை ‘டெலிகிராம்’ செயலி மூலம் பகிர்ந்துகொண்ட லியோங் தியான்வெய், 37, லெனர்ட் டியோ மின் ஸுவான் 26, ஆகியோர் மீது நேற்று நீதிமன்றத்தில் கூடுதல் குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டன. லியோங் மூன்று குற்றச்சாட்டுகளை எதிர்நோக்குகிறார். இதுபோன்ற குற்றத்துக்காக அவர் மீது ஏற்கெனவே ஒரு குற்றச்சாட்டு உள்ளது.
இவ்வாண்டு ஜூன், ஜூலை மாதங்களுக்கு இடைப்பட்ட காலத்தில் ‘டெலிகிராம்’ செயலியில் ‘எஸ்ஜி நாசி லெமாக்’ எனும் உரையாடல் குழு மூலம் லியோங் ஆபாசப் படங்களைப் பகிர்ந்துகொண்டதாகக் கூறப்படுகிறது. ஆபாசப் படங்களைப் பகிர்ந்ததாக ஏற்கெனவே ஒரு குற்றச்சாட்டை எதிர்நோக்கும் லெனர்ட் டியோ மீது இப்போது கூடுதலாக ஒரு குற்றச்சாட்டு சுமத்தப்பட்டுள்ளது. ஆபாசப் படங்களைப் பகிர்ந்ததாக கடந்த வாரம் குற்றஞ்சாட்டப்பட்ட நால்வரில் இவ்விருவரும் அடங்குவர். அப்டில்லாஹ் சபருதீன், 17, ஜஸ்ட்டின் லீ ஹான் ஷி, 19, ஆகியோர் மற்ற இருவர்.