'சிறையில் கொவிட்-19 கண்டறியப்பட்ட நபர், சட்டவிரோதமாக சிங்கப்பூரில் தங்கியவர்'

சிங்கப்பூரில் நேற்று முன்தினம் கிருமித்தொற்று கண்டறியப்பட்ட 142 பேரில் ஒருவர் மட்டுமே சமூகத்தில் இருப்பவர்.

இலங்கை நாட்டவரான அந்த 21 வயது ஆடவர் தற்போது சிறையில் இருக்கிறார்.

சுற்றுப் பயண வருகை அனுமதி முறையில் ஜனவரி மாதம் 10ஆம் தேதி சிங்கப்பூருக்கு வந்த அவர், சாங்கி சிறை வளாகத்தில் ஜூன் 6ஆம் தேதி அனுமதிக்கப்பட்டதிலிருந்து மற்ற கைதிகளிடமிருந்து தனிமைப்படுத்தப்பட்டுள்ளார்.

சட்டவிரோதமாக நீண்ட நாட்களுக்குத் தங்கியிருந்த குற்றத்திற்காக இம்மாதம் 12ஆம் தேதி, அவருக்கு 4 வாரச் சிறைத்தண்டனையும் 3 பிரம்படிகளும் விதிக்கப்பட்டன.

அவர் சிறையில் அனுமதிக்கப்பட்ட அதே நாளில் சிறைக்குச் சென்ற வேறு இருவருக்கு கொரோனா தொற்று இல்லை என்று தெரிவிக்கப்பட்டது.

இந்த 21 வயது ஆடவருக்கு கொரோனா அறிகுறிகள் ஏதும் தென்படவில்லை. அவருக்கு பிரம்படி கொடுக்கப்படும் முன்பு, கொரோனா தொற்றிலிருந்து விடுபட்டு அவர் மருத்துவரீதியாக உடல் தகுதியுடன் இருக்கிறாரா என அவரது உடல்நலம் சோதிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டது.

சமூகத்தில் கிருமித்தொற்று ஏற்படுபவர்களின் சராசரி எண்ணிக்கை தொடர்ந்து குறைந்து வருகிறது.

வெள்ளிக்கிழமை நிலவரப்பட்டி இதுவரையில் 33,449 பேர் கிருமித்தொற்றிலிருந்து முழுமையாகக் குணமடைந்துள்ளனர்.

அனைத்து செய்திகளையும் முழுமையாக வாசிக்க தமிழ் முரசு சந்தாதாரராகுங்கள்! https://tmsub.sg/online

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!