உலக அஞ்சல் தினம் நாளை அனுசரிக்கப்படுகிறது.
இதை முன்னிட்டு சிங்போஸ்ட் அதன் 1,000க்கும் மேற்பட்ட ஊழியர்களுக்காக புதிய சீருடைகளை வடிவமைத்துள்ளது.
நாளை முதல் குடியிருப்பு வட்டாரங்களில் இப்புதிய சீருடைகளில் சிங்போஸ்ட் ஊழியர்கள் வலம் வருவர்.
2011ஆம் ஆண்டுக்குப் பிறகு அஞ்சல்களைக் கையாளும் ஊழியர்களின் சீருடையை முழுமையாக இவ்வாண்டுதான் மாற்றியுள்ளதாகக் கூறப்பட்டது.
வெள்ளை, சிவப்பு, நீலம் ஆகிய நிறங்களைக் கொண்டு ஆறு வெவ்வேறு சீருடைகள் வடிவமைக்கப்பட்டுள்ளன.
நடைமுறைக்கு ஏற்றதாகவும் நவீனத்துவம் பெற்றதாகவும் வடிவமைக்கப்பட்டுள்ள இச்சீருடைகள், ஊழியர்கள் வசதியாகத் தங்களின் பணிகளை ஆற்ற உதவும் என்று சிங்போஸ்ட் தெரிவித்தது.