சிங்கப்பூரில் ஒரு வெளிநாட்டுப் பணிப்பெண் மீது திருட்டுக் குற்றம் சாட்டி அவர் குற்றவாளி என்று தீர்ப்பளிக்கப்பட்டது. அவர் மீது புகார் கூறியவர் வசதி படைத்தவர், செல்வாக்கு மிக்கவர். ஆனால், உயர் நீதிமன்றத்தில் அந்தப் பணிப்பெண் மேல்முறையீடு செய்ய, அவர் பின்னர் விடுவிக்கப்பட்டார்.
இது சிங்கப்பூரில் சட்டத்தின் முன் அனைவரும் சமம் என்பதை எடுத்துக்காட்டுவதாக உள்ளதென்று சட்ட, உள்துறை அமைச்சர் சண்முகம் நேற்று நாடாளுமன்றத்தில் தெரிவித்தார்.
திரு லியூ மன் லியோங் என்பவரின் வீட்டில் பணிப்பெண்ணாக இருந்த பார்தி லியானி தொடர்பான வழக்கு குறித்து நாடாளுமன்றத்தில் நேற்று பேசிய அமைச்சர், இந்த வழக்கு தொடர்பான நிகழ்வுகளை விவரித்தார்.
சிங்கப்பூரில் சட்ட பரிபாலனம் எவ்வாறு இருக்கிறது என்பதற்கு இந்த வழக்கு ஓர் உதாரணம் என்று அமைச்சர் கூறினார்.
“நாம் நீதிமன்றத் தீர்ப்பை ஏற்றுக்கொள்ளலாம், அல்லது ஏற்றுக்கொள்ளாமல் போகலாம், அது பிரச்சினையல்ல,” என்று கூறிய அமைச்சர், இந்த வழக்கு சிங்கப்பூரில் குற்றவியல் நீதித்துறை எவ்வாறு செயல்படுகிறது என்பதை எடுத்துக்காட்டுவதாக உள்ளதாகத் தெரிவித்தார்.
பார்தி லியானி வழக்கு தொடர்பாக அமைச்சர்நிலை அறிக்கையை திரு சண்முகம் நேற்று வாசித்தார்.
பல சமுதாயங்களில் மேல்மட்டத்தில் உள்ளவர்கள் சட்டத்தை தங்கள் விருப்பத்துக்கு வளைக்கின்றனர் என்ற உணர்வு இருப்ப தாகக் கூறிய அமைச்சர், சிங்கப்பூரில் அவ்வாறு இல்லை என்பதை ஆணித்தரமாக வலியுறுத்தினார்.
சிங்கப்பூரில் பல்லாண்டு காலமாக போற்றி வளர்க்கப்பட்ட நீதித்துறையின் நேர்மை கட்டிக்காக்கப்பட வேண்டும் என்றும் விளக்கினார்.
“திரு லியூ மன் லியோங் தமது செல்வாக்கைப் பயன்படுத்தி நடவடிக்கைகளை தமக்கு சாதமாக்கிக்ெகாண்டார் என்றால் அது நமது அடித்தளத்தில் ஓர் அடி விழுந்ததுபோல் ஆகிவிடும்.
“நியாயம், அனைவருக்கும் நீதி போன்ற உயர் எண்ணங்களால் உருவாக்கப்பட்ட நம் நாட்டில் மாசு ஏற்பட்டதுபோல் ஆகிவிடும்,” என்று அவர் கூறினார்.
சிங்கப்பூரில் நீதித்துறை பாழ்படாமல் இருப்பதை நாம் கட்டிக்காக்கும் அதேவேளையில், ஊழலோ அதிகாரத்தைத் தவறாகப் பயன்படுத்துவதோ நிகழாது என்று அர்த்த மாகிவிடாது என்று கூறிய அைமச்சர், அவ்வாறு நடக்குமானால் அதற்கு எதிராக துரிதமாக, தீர்க்கமான நடவடிக்கைகள் எடுத்து அதற்குப் பொறுப்பானர்களை தண்டித்து அதுபோன்ற குற்றங்களை துடைத்தொழிப்பதுதான் நாம் செய்யவேண்டியது என்று கூறினார்.
சிங்கப்பூரின் அரசு நேர்மைையக் கட்டிக்காப்பதில் தயவு தாட்சண்யம் காட்டாது என்பதற்கு அடையாளமாக அவர் முன்னாள் அமைச்சர் தே சியாங் வான் ஊழல் புரிந்ததற்காக கைது செய்யப்பட்டதையும் குடிமைத் தற்காப்புப் படைத் தலைவர் பீட்டர் லிம் ஊழல் குற்றத்துக்காக ஆறு மாதம் சிறை சென்றது, பதவி நீக்கம் செய்யப்பட்டதையும் அமைச்சர் குறிப்பிட்டார்.