கார் நிறுத்துமிடத்தில் இருந்து வெளியேறும்போது இரண்டு பெண்கள் மீது காரை மோதிய 33 வயதான டான் சாக் யீ எனும் மாதுக்கு $3,500 அபராதமும் ஒன்பது மாதங்
களுக்கு வாகனம் ஓட்டத் தடையும் விதிக்கப்பட்டது. கவனக்குறைவால் கடும் காயம் விளைவித்த ஒரு குற்றத்தை டான் ஒப்புக்கொண்டார். அத்தகைய மற்றொரு குற்றச்சாட்டும் தீர்ப்பு வழங்கும்போது கருத்தில் கொள்ளப்
பட்டது.
கடந்த 2019ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் 27ஆம் தேதி மாலை 4.40 மணியளவில் ஜூரோங் ஈஸ்ட் ஸ்திரீட் 24ல் உள்ள புளோக் 252 அருகில் இருந்த கார் நிறுத்து
மிடத்திலிருந்து காரை எடுத்துக்கொண்டு திருவாட்டி டானும் அவரது கணவரும் கிளம்பினர்.
திருவாட்டி டான் காரை ஓட்டினார். அவரது கணவர் முன் இருக்கையில் அமர்ந்திருந்தார். கார் நிறுத்துமிடத்தை விட்டு வெளியேறும் இடத்தில் சாலையைக் கடந்து கொண்டிருந்த 2 பெண்கள் மீது கார் மோதியது. காயமடைந்த பெண்களை ஏற்றிக்கொண்டு இங் டெங் ஃபோங் மருத்துவமனைக்குச் செல்ல உதவினார் சிற்றுந்து ஓட்டுநர் ஒருவர். திருவாட்டி டானின் கணவரும் காயமடைந்தவர்களுடன் மருத்துவமனைக்குச் சென்றார். தம்முடைய காரில் திருவாட்டி டானும் மருத்துவமனைக்குச் சென்றார்.
காயமடைந்தவர்களில் ஒருவர் 48 வயது மாது. அவரது மார்பெலும்புகளில் முறிவு ஏற்பட்டதுடன் மார்பிலும் வலது முட்டியிலும் லேசான காயங்கள் ஏற்பட்டன.
காயமடைந்த மற்றவர் 55 வயது மாது. அவரது முழங்கையில் லேசான காயம் ஏற்பட்டது. காய
மடைந்த இருவரும் விபத்து குறித்து போலிசில் புகார் அளித்தனர்.
கவனக்குறைவால் கடும் காயம் விளைவித்ததற்கு திருவாட்டி டானுக்கு ஈராண்டுகள் வரை சிறை, $5,000 வரை அபராதம் விதிக்கப்பட்டிருக்கலாம்.