ஆசியான் தலைவர்கள் சந்திப்பில் பங்கேற்க சிங்கப்பூர் பிரதமர் லீ சியன் லூங் இந்தோனீசிய தலைநகர் ஜகார்த்தாவுக்கு இன்று (ஏப்ரல் 24) சென்றுள்ளார். மியன்மார் நிலவரம் குறித்து இந்தச் சந்திப்பில் தலைவர்கள் கலந்தாலோசிக்கின்றனர்.
கடந்த ஆண்டு கொவிட்-19 சூழல் தொடங்கியதைத் தொடர்ந்து ஆசியான் தலைவர்கள் நேரடியாக சந்திப்பில் கலந்துகொள்வது இதுவே முதன்முறை. இந்தச் சந்திப்புக்கு புருணை ஏற்பாடு செய்துள்ளது.