ரயிலில் இருக்கும் நேரத்தில் தமது முகக்கவசத்தை அணிய மறுத்த 39 வயது ஆடவரை போலிசார் கைது செய்துள்ளனர். பொது இடத்தில் தொல்லை கொடுத்ததற்காகவும் பாதுகாப்பு இடைவெளி விதிமுறைகளை மீறியதற்காகவும் இவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
“நான் மிகவும் சமயப் பற்று உடையவன்..வயோதிகர்கள் முகக்கவசம் அணிவதைக் கண்டால் எனக்குப் பிடிக்காது,” என்று அவர் சக பயணிகளிடம் சொல்லிக்கொண்டிருந்ததைக் காட்டும் ஒரு காணொளி சமூக ஊடகங்களில் வலம் வருகிறது.
ஜூ கூன் ரயில் நிலையத்தை நோக்கி சென்றுகொண்டிருக்கும் ரயில் ஒன்றில் வெள்ளிக்கிழமை இரவு நேரத்தில் இது நடந்ததாகக் கூறப்படுகிறது. இந்தச் சம்பவத்தின் தொடர்பில் போலிசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.