புக்கிட் தீமா சமூக மன்ற தடுப்பூசி நிலையத்தில் வேலை செய்யும் ஊழியர்கள் சிலருக்குச் சம்பளம் கொடுக்கவில்லை என்று நிறுவனங்கள் மீது புகார் தெரிவிக்கப்பட்டு உள்ளது. அது பற்றி மனிதவள அமைச்சு விசாரணை நடத்தி வருகிறது.
அத்தகைய நிலையங்களில் ஒன்றில் தாதியராகவும் தடுப்பூசி போடுபவராகவும் வேலை பார்த்த தங்களுக்கு ஊதியம் கொடுக்கப்படவில்லை என்று அமைச்சுக்கு ஒன்பது புகார்கள் வந்திருப்பதாக அமைச்சின் பேச்சாளர் உறுதிப்படுத்தி இருக்கிறார்.
பாதிக்கப்பட்டவர்களுக்குத் தான் உதவி வருவதாகவும் இதேபோன்று வேறு யாராவது பாதிக்கப்பட்டு இருக்கிறார்களா என்பதைத் தான் ஆராய்ந்து வருவதாகவும் அமைச்சு குறிப்பிட்டு உள்ளது.