கொவிட்-19 கொள்ளைநோயால் வேலையிடங்கள் தங்களின் தேவைகளை மறுஆய்வு செய்து வருகின்றன. இதனால் தற்போது அமைந்துள்ள வளாகங்களிலிருந்து அலுவலகங்கள் வெளியேறும் சாத்தியம் வரும் மாதங்களில் அதிகம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
தங்களின் அலுவலகத்திற்கான இடத்தைக் குறைப்பதில் பல நிறுவனங்கள் கவனம் செலுத்தி வருகின்றன என்றும் இதனால் வாடகை செலவும் மிச்சமாகும் என்றும் கூறுகின்றனர் துறை சார்ந்தவர்கள்.
கடந்த ஓராண்டாக அலுவலக வேலை ஏற்பாடுகள் குறித்து பல நிலச்சொத்து ஆலோசனை நிறுவனங்கள் மாற்றியமைத்துக்கொள்வதில் ஆர்வம் காட்டி வருகின்றன.
‘கேப்பிட்டல் டவர்’ கட்டடத்திலிருந்து முதலீட்டு வங்கி ‘ஜேபி மோர்கன்’ வெளியேறுவதால் ஆறு மாடிகள், அதாவது 150,000 சதுர அடி இடம் காலியாக இருக்கும் என்று கூறப்படுகிறது.