வீட்டிலிருந்து வேலை செய்வது தொடர்ந்து வழக்கமாக்கப்படும்
சிங்கப்பூரில் நடப்பில் உள்ள கொவிட்-19 கட்டுப்பாடுகள், வரும் திங்கட்கிழமையிலிருந்து (ஜூன் 14) இரு கட்டங்களாக தளர்த்தப்படவிருப்பதாக இன்று அறிவிக்கப்பட்டுள்ளது.
எனினும், வீட்டிலிருந்து வேலை செய்யும் நடைமுறை தொடர்ந்து வழக்கமாக்கப்படும் என்று சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.
வேலையிடத்தில் அல்லது வேலையிடத்திற்கு அருகே உள்ள பொது இடங்களில் மற்றும் பொதுப் போக்குவரத்தில் மக்கள் திரளும் மொத்த எண்ணிக்கையைக் குறைப்பதே அதன் நோக்கம்.