எல்லைக் கட்டுப்பாட்டு நடவடிக்கைகள் கடந்த ஏப்ரல் 24ஆம் தேதி கடுமையாக்கப்பட்ட பின்னர் இந்தியாவிலிருந்து சிங்கப்பூருக்குள் நுழைய 11 பேர் விதிவிலக்கு பெற்றிருப்பதாகவும் அவர்களில் எவரும் சிங்கப்பூர் குடிமக்கள் அல்லது நிரந்தரவாசிகள் அல்லர் என்றும் போக்குவரத்து அமைச்சர் எஸ் ஈஸ்வரன் நாடாளுமன்றத்தில் தெரிவித்துள்ளார்.
சிங்கப்பூர் குடிமக்கள் அல்லது நிரந்தரவாசிகளைச் சார்ந்திருப்பது உள்ளிட்ட விதிவிலக்கான சூழ்
நிலைகளில் மேல்முறையீட்டின் அடிப்படையில் அவர்கள் உள்ளே நுழைய அனுமதி அளிக்கப்பட்டதாகவும் அவர் தெரிவித்தார்.
"கட்டுப்பாடுகள் கடுமையாக்கப்படுவதற்கு முன்னர், அதாவது மார்ச் 1 முதல் ஏப்ரல் 23 வரை இந்தியாவிலிருந்து சிங்கப்பூர்வாசி கள் அல்லாத 9,040 பேர் இங்கு வர அனுமதிக்கப்பட்டனர். இவர்களில் 93 விழுக்காட்டினர், அதாவது 8,404 பேர் நீண்டகால வருகை அட்டை வைத்திருப்பவர்கள்.
"இவர்களில் பெரும்பாலானோர் கட்டுமானம், கடல்துறை கப்பல்
தளம் மற்றும் உற்பத்தித்துறைகளைச் சேர்ந்து ஒர்க் பெர்மிட் ஊழியர்கள். முக்கியத்துவம் வாய்ந்த உத்திபூர்வத் திட்டங்களுக்கும் உள்கட்டமைப்புப் பணிகளுக்கும் உதவ அவர்கள் இங்கு வந்தார்கள்.
"எஞ்சிய 737 பேர் குறுகியகால வருகை அட்டை வைத்திருப்பவர்கள்," என்று திரு ஈஸ்வரன் தெரிவித்தார்.
பாட்டாளிக் கட்சியைச் சேர்ந்த ஹவ்காங் நாடாளுமன்ற உறுப்பினர் டெனிஸ் டான் எழுப்பிய வினாவுக்கு திரு ஈஸ்வரன் எழுத்துபூர்வமாக அளித்த பதிலில் இந்த விவரங்கள் குறிப்பிடப்பட்டு உள்ளன.
ஏப்ரல் 22ஆம் தேதி அப்போதைய கல்வி அமைச்சர் லாரன்ஸ் வோங் ஓர் அறிவிப்பை வெளியிட்டார்.
இருவார காலத்தில் இந்தியாவுக்குச் சென்ற நீண்டகால, குறுகியகால வருகை அட்டைதாரர்கள் ஏப்ரல் 23 இரவு 11.59 மணி முதல் சிங்கப்பூருக்குள் நுழைய அனு
மதிக்கப்படமாட்டார்கள் என்பது அந்த அறிவிப்பு. இந்த நடவடிக்கையால் பாதிக்கப்பட்டடோரில் சிலர் சிங்கப்பூருக்குள் வர அனுமதி பெற்றிருந்தும் ஏப்ரல் 24க்குள் பயணம் செய்யத் தவறியவர்கள்.