சினோவோக் கொவிட்-19 தடுப்
பூசியைப் போட்டுக்கொண்டவர்கள் சிங்கப்பூரின் தேசிய தடுப்பூசித் திட்ட எண்ணிக்கையில் சேர்க்கப்படவில்லை என்று சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. தேசிய தடுப்பூசித் திட்டத்தின்கீழ் தடுப்பூசி போட்டுக்கொண்டவர்கள் மட்டுமே மொத்த எண்ணிக்கையில் சேர்க்கப்பட்டு வருவதாகவும் அது தெரிவித்தது.
இப்போதைய நிலவரப்படி ஃபைசர்-பயோஎன்டெக்/கமிர்னாட்டி, மொடர்னா ஆகிய தடுப்பூசிகளைப் போட்டுக்கொண்டவர்கள் மட்டுமே இந்தக் கணக்கெடுப்புக்கு உட்படுத்தப்படுகிறார்கள் என்று அமைச்சு விளக்கி உள்ளது.
இருப்பினும், சினோவேக் தடுப்பூசியைப் போட்டுக்கொண்டவர்
களின் விவரம் தேசிய நோய்த்
தடுப்புப் பதிவகத்தில் இடம்பெறும். ஹெல்த்ஹப் கைபேசிச் செயலியில் இந்த விவரங்களைக் காட்டுவதற்கான ஏற்பாடுகள் நடைபெற்று வருகின்றன.
ஃபைசர்-பயோஎன்டெக்/கமிர்னாட்டி, மொடர்னா ஆகிய தடுப்பூசிகளின் நோய்த் தடுப்பு ஆற்றல் சற்றேறக் குறைய 90 விழுக்காடு அளவில் உள்ளது. அதே நேரம் சினோவேக்கின் தடுப்பாற்றல் 51 விழுக்காடு என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்தத் தடுப்பூசி வெவ்வேறு விதமான பாதுகாப்பை வழங்குவதாக அனைத்துலக அளவிலான பலதரப்பட்ட ஆய்வு முடிவுகள் காட்டியுள்ளன.
ஜூலை 3ஆம் தேதி நிலவரப்படி சிங்கப்பூரில் 17,296 பேர் முதல் தவணை சினோவேக் தடுப்பூசியைப் போட்டுக்கொண்டுள்ளனர்.