வர்த்தக, தொழில் அமைச்சில் தலைமை தகவல் அதிகாரியான பெர்னர்ட் டோனல்ட் மிரண்டா என்பவர் மதுபானம் அருந்திவிட்டு வாகனம் ஓட்டிய குற்றத்துக்காக அவருக்கு $2,000 அபராதமும் ஈராண்டுகளுக்கு அனைத்து வகையான வாகனங்களும் ஓட்ட தடையும் தண்டனையாக விதிக்கப்பட்டுள்ளது.
இவர் தமது சகோதரரின் வீட்டு இரவு விருந்தின்போது கடந்த மார்ச் மாதம் 18ஆம் தேதியன்று ஒயின் அருந்தியதை நீதிமன்றத்தில் ஒப்புக்கொண்டார்.
திரு பெர்னர்ட் செம்பவாங்கில் உள்ள தமது வீடு நோக்கி இரவு சுமார் 9.00 மணிக்கு கார் ஓட்டிச் சென்றபோது பிடிபட்டதாக நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டுது.
அவருடைய சுவாசக் காற்ைற சோதித்துப் பார்த்தபோது அதில் 100 மில்லி சுவாசக் காற்றில் 43 எம்சிஜி அளவு மதுபானம் இருந்தது தெரியவந்தது.
100 மில்லி சுவாசக் காற்றில் அனுமதிக்கப்ட்ட மதுபான அளவு 35 எம்சிஜி மட்டுமே என்பது குறிப்பிடத்தக்கது.
நீதிமன்றத்தில் கருணை காட்டும்படி கோரிய திரு பெர்னர்ட், இந்தச் சம்பவம் தமது இயற்கை குணத்துக்கு மாறானது என்றும், தான் தவறு செய்துவிட்டதாகவும் இதுபோல் இனி நடக்காது என்றும் தெரிவித்தார்.
அந்த சம்பவத்திற்கு பிறகு தமது காரை தான் விற்றுவிட்டதாகவும் தாம் தற்பொழுது வாகனம் ஓட்டுவதில்லை எனவும் விளக்கினார்.
இவர் வர்த்தக, தொழில் அமைச்சில் சேரும் முன் சிங்கப்பூர் கடற்படையில் ரியர் அட்மிரலாகப் பதவி வகித்தார் என்று ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் பத்திரிகை தெரிவித்துள்ளது.
பின்னர் திரு பெர்னர்ட் எஸ் ராஜரத்தினம் கல்விக் கழகத்தின் கடற்துறை பாதுகாப்புத் திட்டத்தில் மூத்த கல்வியாளராகப் பதவி வகித்தார் என்றும் தெரிவிக்கப்படுகிறது.
தற்பொழுது இவர் அங்கு இல்லை என்றும் விளக்கமளிக்கப்பட்டுள்ளது.