வீட்டிலிருந்து வேலை செய்யும் ஊழியர்களில் 50 விழுக்காட்டினர் வரை ஆகஸ்ட் 19ஆம் தேதியிலிருந்து வேலையிடங்களுக்குத் திரும்ப அனுமதி அளிக்கப்படும்.
கொவிட்-19 நிலவரம் தொடர்ந்து கட்டுக்குள் இருக்கும் பட்சத்தில் கட்டுப்பாடுகள் தளர்த்தப்படுவது நடப்புக்கு வரும் என்று சுகாதார அமைச்சு இன்று (ஆகஸ்ட் 6) தெரிவித்தது.
சமூக அளவில் கொவிட்-19 தொற்று அதிகரித்ததைத் தொடர்ந்து மே 14 முதல் வீட்டிலிருந்து வேலை செய்யும் நடைமுறை நாப்பில் இருந்து வருகிறது.
அதற்கு முன்னதாக மே 8 முதல் பாதியளவு ஊழியர்கள் வேலையிடங்களுக்குத் திரும்ப அனுமதி வழங்கப்பட்டிருந்தது.