கொவிட்-19 தடுப்பூசி போட்டுக்கொள்ளாதவர்கள் இம்மாதம் 16ஆம் தேதியிலிருந்து கட்டுமானத் தளங்களில் பணிபுரியும்போது தடுப்பூசி போட்டுக்கொள்ளவில்லை என்று தங்களை அடையாளப்
படுத்திக்கொள்ள வேண்டும்.
கொவிட்-19 கிருமிப் பரவலைக் கட்டுப்படுத்த நடைமுறைப்படுத்தப்படும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளில் இதுவும் ஒன்று என்று கட்டட, கட்டுமான ஆணையம் கூறியது.
இந்த அடையாள முறை எந்த வடிவில் இருக்கும் என்பது குறித்து தொழில்துறை சங்கங்களுக்கு ஆணையம் அனுப்பிய சுற்றறிக்கையில் குறிப்பிடப்படவில்லை.
ஆனால் வண்ணமயமான மேலங்கிகள், சட்டைக் கைப்பட்டிகள், அல்லது தலைக்கவசங்களில் ஒட்டப்படும் ஒட்டுவில்லைகள் போன்ற வடிவில் அடையாள முறை இருக்கலாம் என்று நம்பப்படுகிறது.
கட்டுமானத் தளங்களுக்குள் ஊழியர்கள் செல்வதற்கு முன்பு அவர்கள் தடுப்பூசி போட்டுக்கொண்டவர்களா அல்லது போட்டுக்கொள்ளாதவர்களா என்பதை அங்குள்ள பாதுகாப்பு அதிகாரிகள் சரிபார்த்து உறுதி செய்ய வேண்டும்.
தடுப்பூசி போட்டுக்கொள்ளாத ஊழியர்கள் கட்டுமானத் தளங்களில் இருக்கும்போது அவர்கள் விதிமுறைக்கு உட்பட்டு நடந்துகொள்கின்றனரா என்பதை உறுதி செய்ய அவர்களைப் பாதுகாப்பு அதிகாரிகள் உன்னிப்பாக
கண்காணிக்க வேண்டும்.
கட்டுமானத் துறை நிறுவனங்
களின் ஊழியர்கள் சிலருக்குப் புதிதாக கொவிட்-19 பாதிப்பு ஏற்பட்டுள்ளதை அடுத்து, இந்தக்
கட்டுப்பாடுகள் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது.
கியான் ஹியாப் கட்டுமான நிறுவனத்தில் கொவிட்-19 குழுமம் ஏற்பட்டுள்ளதாக இவ்வாரத் தொடக்கத்தில் சுகாதார அமைச்சு தெரிவித்தது.
"சிங்கப்பூரில் கட்டுமானத் துறையைச் சேர்ந்த ஊழியர்
களுக்கு கொவிட்-19 பாதிப்பு ஏற்பட்டுள்ளது. கிருமித்தொற்று ஏற்பட்ட ஊழியர்கள் வேலை பார்த்த கட்டுமானத் தளங்களில் பணிகளை நிறுத்த உத்தரவிடப்பட்டுள்து. பாதிக்கப்பட்ட வேலை
இடங்களில் துப்புரவுப் பணிகளை மேற்கொள்ளவும் வேலைத் திட்டத்தை மறுஆய்வு செய்து பாதுகாப்பு நடவடிக்கைகளை நடை
முறைப்படுத்த சம்பந்தப்பட்ட ஒப்பந்ததாரர்களுக்குக் காலஅவகாசம் வழங்கவும் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது," என்று ஆணையம் தெரிவித்தது.