வெவ்வேறு சமய வழக்கங்களுக்கு இடையிலான ஒற்றுமைகளைக் கண்டறிவதால் நல்லிணக்கத்தைத் தக்கவைத்துக்கொள்ள முடிவதுடன் பொதுவான இடங்களைப் பகிர்ந்துகொள்ளவும் தோதாக இருக்கும் என்று சமய வழிகாட்டிகளும் தலைவர்களும் கூறியுள்ளனர். அவர்கள் நேற்று ஃபுராமா ரிவர்ஃப்ரன்ட் ஹோட்டலில் நடைபெற்ற சமயங்களுக்கு இடையிலான கலந்துரையாடல் ஒன்றில் இவ்வாறு கூறியிருந்தனர்.
சிங்கப்பூரில் நல்லிணக்கத்தைத் தக்கவைத்துக்கொள்ள, பலமுனை அணுகுமுறை தேவைப்படுவதாக சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்ட உள்துறை ச்சரும் நீடித்த நிலைத்தன்மை, சுற்றுப்புற சருமான டெஸ்மண்ட் டான் கூறினார்.
சமய விவகாரங்கள் குறித்துக் கடுமையான சட்டம், கொள்கைகளைக் கொண்டிருப்பதில் அரசாங்கத்திற்கு முக்கியப் பங்கு இருந்தாலும் தனிநபர்களுக்கிடையே கலந்துரையாடலும் செயல்பாடும் இருப்பது முக்கியம் என்றார் அவர்.
ஒருவரையொருவர் சென்றடைவது, தொடர்பு ஏற்படுத்திக்கொள்வது, குடியிருப்பு வட்டாரத்தில் நடைபெறும் சமூக நடவடிக்கைகளில் பங்கேற்பது போன்றவை இன நல்லிணக்கத்தை வலுவாக்க ஒரு நபர் எடுத்துக்கொள்ளக்கூடிய சுய முயற்சிகள் என்றார் அவர்.