அடுத்தகட்ட சினோவேக் கொவிட்-19 தடுப்பூசிகள் 4-6 வாரங்களுக்குள் சிங்கப்பூர் வந்தடையும் என சுகாதார அமைச்சு கூறியுள்ளது.
தற்போது அரசாங்க இருப்பில் 200,000 தடுப்பூசி மருந்துகள் ஏற்கனவே ஒதுக்கி வைக்கப்பட்டு உள்ளன. இந்த மருந்தை பெறுவதற்குத் தனியார் சுகாதார நிறுவனங்களுக்கு உதவிவருவதாக அமைச்சு அறிவித்துள்ளது.
அரசாங்க இருப்பில் உள்ள தடுப்பு மருந்துகளில் மொத்தம் 170,000 தடுப்பு மருந்துகள் 31 தனியார் சுகாதார நிறுவனங்களுக்காக ஒதுக்கி வைக்கப்பட்டுள்ளன.
இதன் மூலம் சுமார் 85,000 பேர் இலவசமாகத் தடுப்பூசி பெறுவர். எஞ்சிய 30,000 தடுப்பூசிகள் எம்ஆர்என்ஏ தடுப்பூசியால் ஒவ்வாமை ஏற்பட்ட சிங்கப்பூரர்களுக்காகவும் நிரந்தர வாசிகளுக்காகவும் நீண்டகால அனுமதியுடையவர்களுக்காக வும் மற்றவர்களுக்கும் ஒதுக்கி வைக்கப்பட்டுள்ளன.
மற்றவர்கள் பிரிவில் அடங்குவோரைப் பற்றிய விவரங்களை அமைச்சு தெரிவிக்கவில்லை.