ஆசிய பசிஃபிக் பொருளியல் அமைப்பின் (ஏபெக்) பொருளியல் தலைவர்கள் சந்திப்புக் கூட்டம், நாளை இணையம்வழி நடைபெறவுள்ளது. இதில் பிரதமர் லீ சியன் லூங் கலந்துகொள்ள இருக்கிறார். சந்திப்புக் கூட்டத்தைத் தலைமை ஏற்று நடத்துபவர் நியூசிலாந்து பிரதமர் ஜசிந்தா ஆர்டென். 1989ஆம் ஆண்டில் வட்டாரப் பொருளியல் நிறுவனமாக ஏபெக் தொடங்கப்பட்டது. இதில் 21 உறுப்பு நாடுகள் இடம்பெற்றுள்ளன.
இன்று நடைபெறும் 'ஏபெக்' வர்த்தக ஆலோசனை மன்றத் தலைவர்கள் கலந்துரையாடலிலும் திரு லீ கலந்துகொள்வார் என்று பிரதமர் அலுவலக அறிக்கை குறிப்பிட்டுள்ளது.
உலகின் தலைமை நிர்வாகிகள், வர்த்தகத் தலைவர்கள், அரசியல் தலைவர்கள் கலந்துகொள்ளும் இரு நாள் 'ஏபெக்' தலைமை நிர்வாக அதிகாரிகள் மாநாட்டிலும் பிரதமரின் 15 நிமிட உரை ஒன்று இடம்பெறும். முன்பதிவு செய்யப்பட்ட உரை, நிகழ்வின்போது நேரடியாக ஒளிபரப்பப்படும்.