பேருந்தில் இருந்து முதியவர் ஒருவர் இறங்கிக்கொண்டு இருந்தபோது பேருந்து ஓட்டுநர் கதவுகளை மூடியதால் அவர் கீழே விழுந்தார்.
ஹவ்காங் பேருந்துச் சந்திப்பு நிலையத்தில் செவ்வாய்க்கிழமை (நவம்பர் 9) பிற்பகல் 2.40 மணியளவில் இச்சம்பவம் நிகழ்ந்ததாக நம்பப்படுகிறது.
இதைக் காட்டும் காணொளி ஒன்று சமூக ஊடகங்களில் வலம் வருகிறது. சம்பந்தப்பட்ட பேருந்தின் கண்காணிப்புக் கருவியில் அக்காணொளிக் காட்சி பதிவானதாகத் தெரிகிறது.
அந்த மாது பேருந்தில் இருந்து இறங்கிக்கொண்டு இருந்தபோது கதவுகள் மூடியதில் அவரது கால், கதவுகளுக்கு இடையே மாட்டிக்கொண்டது. இதனால், நிலைதடுமாறி அவர் கீழே விழுந்தார்.
அதையடுத்து, பேருந்து ஓட்டுநர்கள் சிலர் அவரைத் தூக்கிவிட விரைந்து வந்தனர்.