உலகின் சிறந்த விமான நிலையமாக சிங்கப்பூர் விமான நிலையத்தை 'ஃபார்ச்சுன்' சஞ்சிகை தேர்வுசெய்துள்ளது.
உலக அளவில் வியந்து போற்றும் 50 நிறுவனங்களுக்கான 'ஃபார்ச்சுன்' பட்டியலில், ஆசிய அளவில் சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் முதலிடம் பெற்றுள்ளது.
ஒட்டுமொத்த பட்டியலில் கடந்த ஆண்டு 34ஆம் இடத்தைப் பிடித்த அந்நிறுவனம், இவ்வாண்டு ஈரிடங்கள் முன்னேறி 32ஆம் இடத்தைப் பிடித்துள்ளது.
ஆண்டுதோறும் வெளியிடப்படும் இப்பட்டியலில் 20வது முறையாக சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் இடம்பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.
முன்னணித் தொழில்நுட்ப நிறுவனங்களான ஆப்பிள், அமேசான், மைக்ரோசாஃப்ட் ஆகியவை முறையே முதல் மூன்று இடங்களைப் பிடித்தன. மருந்து தயாரிப்பு நிறுவனமான ஃபைசர் நான்காமிடத்தில் வந்தது.
ஜப்பானின் டொயோட்டா மோட்டார், பட்டியலில் இடம்பிடித்துள்ள இன்னோர் ஆசிய நிறுவனம். அது 34ஆம் இடத்தில் இருக்கிறது.
தாங்கள் வியந்து போற்றும் நிறுவனங்களைத் தரவரிசைப்படுத்தும்படி பல்வேறு துறைகளைச் சேர்ந்த 3,740 நிர்வாகிகள், இயக்கு நர்கள், பகுப்பாய்வாளர்களை ஃபார்ச்சுன் சஞ்சிகை கேட்டுக்கொண்டது.
அதனடிப்படையில் உலகின் சிறந்த நிறுவனங்களின் பட்டியல் உருவாக்கப்பட்டுள்ளது.
கடந்த ஆண்டு உலகின் சிறந்த இரண்டாவது விமான நிறுவனமாக வந்த சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் இம்முறை முதலிடத்திற்கு முன்னேறி உள்ளது.
இது, சிங்கப்பூர் ஏர்லைன்சின் உலகத் தரமான சேவைக்குக் கிடைத்துள்ள அங்கீகாரம் என்று அதன் தலைமை நிர்வாகி கோ சூன் ஃபோங் தெரிவித்தார்.