சிங்கப்பூரில் கொவிட்-19 தொற்று காரணமாக மருத்துவமனைகளில் சிகிச்சை பெறுவோர் எண்ணிக்கை 1.000ஐ தாண்டியுள்ளது.
சுகாதார அமைச்சின் அன்றாட அறிக்கையில், கடந்த சனிக்கிழமை (பிப்ரவரி 5) நிலவரப்படி கொவிட்-19 கிருமி தொற்றி மருத்துவமனைகளில் 1,068 பேர் இருந்தனர்.
ஒப்புநோக்க வெள்ளிக்கிழமை அன்று மருத்துவமனைகளில் 998 தங்கி சிகிச்சை பெற்றனர்.
கடைசியாக, கடந்த 2021 டிசம்பர் 1ம் தேதி அன்று மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்றவர்கள் எண்ணிக்கை 1,000க்கு மேல் இருந்தது.
கொவிட்-19 தொற்றால் இருவர் மாண்டதாாவும் சுகாதார அமைச்சு கூறியது.
அத்துடன், சனிக்கிழமை நிலவரப்படி சிங்கப்பூரில் 10,208 பேருக்கு புதிதாக கொவிட்-19 கிருமி தொற்றியது.
இது வெள்ளிக்கிழமை காணப்பட்ட 13,046 எனும் எண்ணிக்கையைவிட குறைவு.
வெளிநாடுகளில் வந்த 182 பேருக்குக் கிருமி தொற்றியது.
உள்ளூரில் நோய் தொற்றிய சுமார் பத்தாயிரம் பேரில் 7,474 பேருக்கு ஏஆர்டி கிருமிப் பரிசோதனைகளின் மூலம் தொற்று கண்டுபிடிக்கப்பட்டது.
அதாவது அவர்களுக்கு அறிகுறிகள் ஏதும் இல்லை அல்லது மிதமான அறிகுறிகள் மட்டும் இருந்தன.
மீதமுள்ளவர்களுக்கு பிசிஆர் பரிசோதனைகளில் கிருமித்தொற்று கண்டுபிடிக்கப்பட்டது.
மருத்துவமனைகளில் 23 தீவிர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சைப் பெற்று வருகின்றனர். வெள்ளிக்கிழமை 15 பேர் தீவிர சிகிச்சைப் பிரிவில் இருந்தனர்.
86 பேருக்கு செயற்கை உயிர் வாயு தேவைப்பட்டது. ஒப்புநோக்க வெள்ளிக்கிழமை 96 பேருக்கு செயற்கை உயிர்வாயு தேவைப்பட்டது.
வாராந்திரத் தொற்றுப் பரவல் விகிதம் சனிக்கிழமை அன்று 1.44ஆக இருந்தது. இது வெள்ளிக்கிழமை இருந்த 1.39 எனும் விகிதத்தைவிட அதிகம்.