உட்லண்ட்ஸ் டிரைவில் உள்ள புளோக் 688F 14வது மாடி வீடு ஒன்றில் இன்று பிற்பகல் தீ மூண்டது.
முன்னெச்சரிக்கையாக 50 குடியிருப்பாளர்கள் வெளியேற்றப்பட்டனர். யாருக்கும் காயமில்லை.
தீ குறித்து சுமார் ஒன்றரை மணியளவில் தகவல் கிடைத்தாக சிங்கப்பூர் குடிமைத் தற்காப்புப் படை தெரிவித்தது.
வீட்டின் ஓர் அறையில் தீ கொளுந்துவிட்டு எரிந்ததாக குடிமைத் தற்காப்புப் படை அதன் ஃபேஸ்புக் பக்கத்தில் குறிப்பிட்டிருந்தது.
அந்த வீட்டின அடுக்குமாடி தளத்தில் சிதைந்த சன்னல் பாகங்களும், கருகிய பொருட்களும் காணப்பட்டன.
தீச்சம்பவத்துக்கான காரணத்தை சிங்கப்பூர் குடிமைத் தற்காப்புப் படை விசாரித்து வருகிறது.