வேலை அனுமதி அட்டை, அதாவது எம்பிளாய்மன்ட் பாஸ் வைத்திருக்கும் ஊழியர்களுக்கான குறைந்தபட்ச சம்பளத்தை சிங்கப்பூர் உயர்த்த உள்ளது.
நிதி அமைச்சர் லாரன்ஸ் வோங் வெள்ளிக்கிழமை (பிப்ரவரி 18) அன்று இதைத் தெரிவித்தார்.
நாடாளுமன்றத்தில் வரவுசெலவுத் திட்டத்தை தாக்கல் செய்தபோது அவர் இதைத் தெரிவித்தார்.
எம்பிளாய்மன்ட் பாஸ் பெற புதிதாக விண்ணப்பம் செய்பவர்களுக்கான குறைந்தபட்ச சம்பளம் $4,500லிருந்து $5,000க்கு உயர்த்தப்படும்.
இந்த ஆண்டு செப்டம்பர் மாதம் இது நடப்புக்கு வரும்.
ஊழியர்கள் அதிகச் சம்பளம் பெறும் நிதிச் சேவைகள் துறையில் குறைந்தபட்ச சம்பளம் $5,000லிருந்து $5,500க்கு உயர்த்தப்படும்.
சரியான திறமையுள்ளவர்கள் வேலை அனுமதியில் இங்கு வருவதை உறுதி செய்ய சம்பள வரைமுறைகள் அவ்வப்போது மாற்றப்படுவதாக திரு வோங் கூறினார்.
முதலாளிகள் அவர்களுக்கு எவ்வளவு சம்பளம் தரத் தயாராக உள்ளனர் என்பது அவர்களின் தரத்தை நடைமுறையில் எடுத்துரைக்கிறது என்றார் அவர்.