இந்த வாரயிறுதியும், அடுத்த வாரயிறுதியும் ஆறு பலதுறை மருந்தகங்கள் திறந்து வைத்திருக்கப்படும்.
கிருமித் தொற்று அறிகுறிகள் உள்ளவர்கள் மட்டுமே நீட்டிக்கப்பட்ட நேரங்களில் இந்தப் பலதுறை மருந்தகங்களில் சிகிச்சை நாடாலம் என்று அமைச்சு தெரிவித்தது.
பிப்ரவரி 26, 27, மார்ச் 5, 6 ஆகிய தேதிகள் பலதுறை மருந்தகங்கள் திறந்திருக்கப்படும்
மேற்கொண்ட தேதிகளில் திறந்திருக்கும் பலதுறை மருந்தகங்கள்:
- புக்கிட் பாஞ்சாங்
- காலாங்
- பொங்கோல்
- உட்லண்ட்ஸ்
- யூனோஸ்
- பயனியர்
காய்ச்சல், இருமல், சளிக்காய்ச்சல், சுவாசப் பிரச்சினைக்கான அறிகுறிகள் உள்ளவர்கள் மட்டுமே நீட்டிக்கப்பட்ட நேரங்களில் இந்த மருந்தகங்களுக்குச் செல்லலாம்.
இந்த அறிகுறிகள் இல்லாதவர்கள் மற்ற பொது மருந்தகங்களுக்குச் செல்லுமாறு அமைச்சு அறிவுறுத்தியது.
கொவிட்-19 கிருமிப் பரவலுக்கு எதிரான தேசிய செயல்பாடுகளுக்கு ஆதரவாகவும், நோயாளிகளின் எண்ணிக்கையைச் சமாளிக்கவும் இந்த ஏற்பாடு செய்யப்பட்டிருப்பதாக அமைச்சு கூறியது.