புதிதாக 18,597 பேருக்குக் கொவிட்-19 தொற்று; மருத்துவமனைகளில் 1,584 பேர்
சிங்கப்பூரில் வெள்ளிக்கிழமை (பிப்ரவரி 25) அன்று 18,597 பேருக்குப் புதிதாக கொவிட்-19 தொற்று பதிவானது.
சுகாதார அமைச்சு அதன் அன்றாட அறிக்கையில் இதைத் தெரிவித்தது.
கடந்த வியாழக்கிழமை (பிப்ரவரி 24) பதிவான 18,593 புதிய தொற்றுச் சம்பவங்களைவிட இது சற்றுக் குறைவு.
தொடர்ந்து இரண்டாவது நாளாக 20,000க்கும் குறைவான புதிய தொற்றுச் சம்பவங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன.
மேலும், 1,584 கொவிட்-19 நோயாளிகள் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர் என்று அமைச்சு கூறியது.
ஒப்புநோக்க 1,615 பேர் வியாழக்கிழமை அன்று மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வந்தனர்.
மேலும், 46 பேர் தீவிர சிகிச்சை பெற்று வருகின்றனர். 211 பேருக்கு செயற்கை சுவாசம் அளிக்கப்பட்டு வருகிறது.
11 பேர் உயிர் இழந்தனர்.
உள்ளூரில் கிருமி தொற்றியவர்களில் 15,313 பேருக்கு ஏஆர்டி பரிசோதனைகள் மூலம் தொற்று கண்டுபிடிக்கப்பட்டது.
அது அவர்களுக்கு நோய் அறிகுறிகள் இல்லை அல்லது மிதமான அறிகுறிகள் மட்டுமே இருந்தள என்பதைக் காட்டுகிறது.
மேலும் 3,070 பேருக்கு பிசிஆர் பரிசோதனைகளின் வழி கிருமித்தொற்று கண்டுபிடிக்கப்பட்டது.
வெளிநாட்டிலிருந்து வந்த 214 பேருக்குக் கிருமித் தொற்று கண்டுபிடிக்கப்பட்டது.
அத்துடன், வாராந்திரக் கிருமிப் பரவல் விகிதம் 1.26 ஆக இருந்தது. இது வியாழன் அன்று காணப்பட்ட 1.37 எனும் விகிதத்தைவிட குறைவு.
சிங்கப்பூரில் வெள்ளிக்கிழமை நிலவரப்படி மொத்தம் 679,795 பேருக்கு கொவிட்-19 கிருமி தொற்றியுள்ளது.
மரணம் அடைந்தவர்கள் 986 பேர்.
சிங்கப்பூர்வாசிகளில் தடுப்பூசி போட்டுக்கொள்ள தகுதியுடையோரில் 94 விழுக்காட்டினர் முழுமையாக தடுப்பூசி போட்டுக்கொண்டுள்ளனர்.
67 விழுக்காட்டினர் பூஸ்டர் தடுப்பூசி பெற்றுள்ளனர்.