சிங்கப்பூரில் நேற்று முன்தின நிலவரப்படி மேலும் 17,564 பேருக்கு கொவிட்-19 கிருமித்தொற்று ஏற்பட்டது. 1,678 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். கடந்த வியாழக்கிழமை பதிவான எண்ணிக்கையைவிட இது குறைவு.
18,162 பேருக்குக் கிருமித்தொற்று ஏற்பட்டுள்ளதாக கடந்த வியாழக்கிழமை உறுதி செய்யப்பட்டது. அன்று 1,685 பேர்
கிருமித்தொற்று காரணமாக
மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தனர்.
கடந்த ஜனவரி மாதம் 3ஆம் தேதிக்குப் பிறகு தொடர்ந்து மூன்றாவது நாளாக வாராந்திர தொற்று விகிதம் ஒரு புள்ளிக்கும் குறைவாகப் பதிவாகியுள்ளது.
கடந்த வியாழக்கிழமை நில
வரப்படி அது 0.98ஆகப் பதிவானது. வாராந்திர தொற்று விகிதம் ஒரு புள்ளிக்கும் அதிகமாக இருந்தால் கொவிட்-19 பாதிப்பு அதி
கரிப்பதாக அர்த்தம்.
இதற்கிடையே, கடந்த
வியாழக்கிழமையன்று தீவிர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை பெற்று வருவோர் எண்ணிக்கை 53ஆக இருந்தது. இது நேற்று முன்
தினம் 45ஆக குறைந்தது.
211 பேருக்கு உயிர்வாயுக் கருவி பொருத்தப்பட்டது.
கொவிட்-19 கிருமித்தொற்று காரணமாக நேற்று முன்தினம் மேலும் 18 பேர் மாண்டனர்.
கடந்த வியாழக்கிழமை
ஒன்பது பேர் உயிரிழந்தனர்.
சமூக அளவில் பாதிக்கப்பட்டோரில் 15,037 பேருக்கு ஏண்டிஜன் விரைவுப் பரிசோதனை (ஏஆர்டி) மூலம் கிருமித்தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது.
அவர்களுக்கு இலேசான அறிகுறிகள் இருந்ததாக தெரிவிக்கப்பட்டது.
2,369 பேருக்கு கிருமித்தொற்று இருப்பது பிசிஆர் பரிசோதனை மூலம் தெரியவந்தது.
வெளிநாடுகளிலிருந்து வந்த 158 பேருக்குக் கிருமித்தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது.
அவர்களில் 56 பேருக்கு பிசிஆர் பரிசோதனை வழியாகவும் 102 பேருக்கு ஏஆர்டி பரிசோதனை வழியாகவும் நோய் இருப்பது தெரியவந்தது.