இந்திய, மலாய் இனத்தவரிடையே ஆரோக்கியமான வாழ்க்கைமுறைகளை ஊக்குவிக்க, அவற்றின் சமூகத் தலைவர்களுடனும் பங்காளிகளுடனும் சுகாதார அமைச்சு இணைந்து பணியாற்றும்.
அத்துடன், இந்திய சமூகத்திற்கான சுகாதார மேம்பாட்டு நடவடிக்கைகள் செயல்படுத்தப்படும் .
சுகாதார அமைச்சின் நாடாளுமன்றச் செயலாளர் ரஹாயு மஹ்ஸாம் நாடாளுமன்றத்தில் புதன்கிழமை (மார்ச் 9) அன்று இதைத் தெரிவித்தார்.
சிங்கப்பூரில் உள்ள சிறுபான்மை இனக் குழுக்களின் உடல்நலத்தை மேம்படுத்தும் நோக்கில் சுகாதார அமைச்சு கடந்த ஆண்டு ஒரு பணிக்குழுவை உருவாக்கியது.
கலாசாரத்திற்குப் பொருத்தமான திட்டங்களை வடிவமைக்கவும் மோசமான சுகாதாரப் பழக்கங்களுக்கு எதிராகச் சமூகத்தை அணிதிரட்ட உதவவும் அப்பணிக்குழு இலக்கு கொண்டுள்ளது.
இந்திய சமூகத்திற்கான சுகாதார மேம்பாட்டு நடவடிக்கைகளில் எடுத்துக்காட்டாக, ஆரோக்கிய சமையலை ஊக்குவிக்க சிண்டா போன்ற முக்கியப் பங்காளிகளுடன் வாரியம் பணியாற்றும்.
அத்துடன் ஆரோக்கிய உணவுத் திட்டத்தில் பங்கெடுக்குமாறு இந்திய உணவு, பானக் கடைகளை வாரியம் ஆர்வத்துடன் ஈடுபடுத்தி வருகிறது.
ஆரோக்கியத் தெரிவுகளைத் தேர்வுசெய்யும் வாடிக்கையாளர்களுக்கு இத்திட்டம் வெகுமதி அளிக்கும்.