சிங்கப்பூரில் கொவிட்-19 கிருமித்தொற்றால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை தொடர்ந்து குறைந்து வருவதால் 'டோர்ஸ்கோன்' எனப்படும் நோய்ப் பரவலை எதிர்கொள்ளும் முறைக்கான கட்டமைப்பு மூலம் விடுக்கப்படும் எச்சரிக்கைநிலை இம்மாதம் 26ஆம் தேதி முதல் ஆரஞ்சிலிருந்து மஞ்சள் நிறத்துக்குக் குறைக்கப்படுகிறது.
'டோர்ஸ்கோன்' எச்சரிக்கைநிலை மஞ்சள் நிறத்துக்கு மாற்றப்படுவதால் ஒட்டுமொத்த அடிப்
படையில் அன்றாட வாழ்க்கை பொதுவாக வழக்கநிலைக்குத் திரும்பலாம். கொவிட்-19 பாதிப்பு அதிகமாக இருந்தபோது 2020ஆம் ஆண்டு பிப்ரவரி மாதத்தில் டோர்ஸ்கோன் எச்சரிக்கைநிலை ஆரஞ்சு நிறத்துக்கு உயர்த்தப்பட்டது.
கொவிட்-19 கிருமித்தொற்றுக்கு எதிரான அமைச்சுகள்நிலை பணிக்குழு நேற்று நடத்திய மெய்நிகர் செய்தியாளர் கூட்டத்தில் 'டோர்ஸ்கோன்' எச்சரிக்கைநிலை மஞ்சள் நிறத்துக்குக் குறைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டது.
'டோர்ஸ்கோன்' எச்சரிக்கைநிலை பச்சையாக இருந்தால் மிகச் சிறிய பிரச்சினைகள் மட்டும் இருக்கிறது என்று அர்த்தம்.
எச்சரிக்கைநிலை மஞ்சளாக இருந்தால் இலேசான கிருமித்தொற்று அல்லது பாதிப்பு கடுமையாக இருந்தாலும் கிருமிப் பரவல் அபாயம் இல்லை என்று பொருள்கொள்ள வேண்டும். இந்த நிலையில், பொதுமக்கள் கவனமாக இருக்க வேண்டும்.
எச்சரிக்கைநிலை ஆரஞ்சு நிறமாக இருந்தால் நோய் கடுமையாக இருப்பதுடன் கிருமிப் பரவல் அபாயம் இருப்பதாகவும் அர்த்தம்.
இருப்பினும், கிருமிப் பரவல் கட்டுக்குள் இருப்பதாகவும் பொதுச் சுகாதாரத்துக்கு மிதமான அல்லது கடுமையான பாதிப்பு இருப்பதை இந்த எச்சரிக்கைநிலை காட்டுகிறது.
சிங்கப்பூரில் 'டோர்ஸ்கோன்' எச்சரிக்கைநிலை மிக மோசமான நிலையான சிவப்பு நிறத்தை எட்டவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
"பொதுமக்களுக்கு இது தெரியாமல் இருக்கக்கூடும். ஆனால் நிலைமைக்கு ஏற்ப தயார்நிலையில் இருக்க சுகாதாரப் பராமரிப்பு நிலையங்கள் உட்பட மற்ற அரசாங்க அமைப்புகளுக்கும் 'டோர்ஸ்கோன்' எச்சரிக்கைநிலை
பேருதவியாக இருக்கிறது.
"எச்சரிக்கைநிலை உயர்த்தப்
படும்போது அதற்கு ஏற்றாற்போல சில நடவடிக்கைகளை எடுக்க வேண்டும். உதாரணத்துக்கு, கொவிட்-19 பாதிப்பு அதிகரித்தால் கூடுதல் நோயாளிகளுக்குத் தேவையான படுக்கைகளைத் தயார் செய்ய வேண்டும்," என்று
வர்த்தக, தொழில் அமைச்சர் கான் கிம் யோங் தெரிவித்தார்.