வெளிநாட்டுச் சுற்றுப்பயணிகள் கொவிட்-19 தடுப்பூசி போட்டுக்கொண்டவர்களாக இருந்தால் சிங்கப்பூருக்குள் நுழைய கொவிட்-19 பரிசோதனை செய்துகொள்ளத் தேவையில்லை. இது இம்மாதம் 26ஆம் தேதியிலிருந்து நடப்புக்கு வருகிறது. விமானம் மற்றும் கடல் வழியாக சிங்கப்பூருக்கு வரும் வெளிநாட்டுச் சுற்றுப்பயணிகள் கொவிட்-19 பரிசோதனைக்காக இனிமேல் செலவு செய்யத் தேவையில்லை. அதுமட்டுமல்லாது, சிங்கப்பூருக்குப் புறப்பட்டு வருவதற்கு முன்பு அவர்கள் பரிசோதனை செய்துகொள்ள முன்பதிவு செய்யும் தேவையும் இருக்காது.
சிங்கப்பூரையும் மலேசியாவையும் இணைக்கும் ஜோகூர் பாலம், துவாஸ் பாலம் ஆகியவற்றின் மூலம் சிங்கப்பூருக்கு வரும் சுற்றுப்
பயணிகளுக்கு ஏற்கெனவே இது நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது.
தற்போது சிங்கப்பூருக்கு வரும் சுற்றுப்பயணிகள் பயணத்துக்கு முன்பு நிபுணர்களால் மேற்கொள்ளப்படும் பிசிஆர் பரிசோதனையைச்
செய்துகொள்ள வேண்டும்.
அல்லது நிபுணர்களால் மேற்கொள்ளப்படும் அல்லது
அங்கீகரிக்கப்பட்டவரின் மேற்
பார்வையின்கீழ் காணொளி மூலம் ஏஆர்டி பரிசோதனை செய்துகொள்ள வேண்டும்.