வேலையிடப் பாதுகாப்பை சரிசெய்ய நேரம் எடுத்துக்கொள்ளும்படி நிறுவனங்களிடம் வலியுறுத்து

பல்வேறு துறைகளில் வேலையிட மரணங்கள் நிகழ்ந்ததை அடுத்து, பாதுகாப்பை உறுதிசெய்ய நேரம் எடுத்துக்கொள்ளும்படி நிறுவனங்கள் வலியுறுத்தப்பட்டுள்ளன.

மனிதவள அமைச்சு, வேலையிட பாதுகாப்பு, சுகாதார மன்றம், தேசிய தொழிற்சங்கக் காங்கிரஸ், நிறுவனப் பங்காளிகள் ஆகியவை ஞாயிற்றுக்கிழமை (மே 8) அன்று விடுத்த அறிக்கையில் இதைத் தெரிவித்தன.

வழக்கமான வேலைகளை நிறுத்தும் அந்த நேரத்தில் பாதுகாப்பு நிர்வாக முறைகளை மறு ஆய்வு செய்து, பழைய தவறுகளைத் திருத்திக் கொள்ளவேண்டும் என்றும் அவை கூறின.

கடந்த ஏப்ரல் மாதம் மட்டும் 10 வேலையிட மரணங்கள் நிகழ்ந்தன.

அதன்வழி, இவ்வாண்டு இதுவரை 20 வேலையிட மரணங்கள் நிகழ்ந்துவிட்டன.

கடந்த 2016 ஜனவரி முதல் ஏப்ரல் வரையிலான காலகட்டத்துக்குப் பிறகு இதுவே ஆக அதிக மரண எண்ணிக்கை ஆகும்.

பாரந்தூக்கியில் அமரும்போது பாதுகாப்பு வார், உயரமான இடங்களில் வேலை செய்யும் போது பாதுகாப்பு கவசங்கள் போன்ற அடிப்படை பாதுகாப்பு நடைமுறைகள் குறிப்பிட்டுச் சொல்லப்பட்டன.

ஊழியர்கள் அவற்றை அணியாததால் அல்லது அவை போதுமான இல்லாததால் மரணங்கள் நிகழ்ந்ததாக அமைப்புகள் கூறின.

பாதுகாப்பு விதிமுறைகளைப் பின்றபற்றி இருந்தால் கணிசமான மரணங்களை தவிர்த்து உயிர்களைக் காப்பாற்றி இருக்கலாம் என்றும் அறிக்கை கூறியது.

ஏழு துறைகளைச் சேர்ந்த சங்கங்கள் பாதுகாப்பு நடைமுறை அவகாசத்தைக் கடைபிடிக்கும்.

பாதுகாப்பை மறுஆய்வு செய்ய இரண்டு வாரங்கள் வேலைகள் நிறுத்தி வைக்கப்படும்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!