செங்காங்கில் உள்ள ஒரு கூட்டுரிமை குடியிருப்பு வீட்டில் தீ மூண்டது. வீட்டின் சமையல் அறையில் தீ மூண்டதாக சிங்கப்பூர் குடிமைத் தற்காப்புப் படை தெரிவித்தது.
வீட்டில் இருந்த ஒரு நாயைத் தீயணைப்பாளர்கள் காப்பாற்றினர். பாதிக்கப்பட்ட புளோக்கிலிருந்து 10 பேர் பத்திரமாக மீட்கப்பட்டனர்.
தி குவார்ட்ஸ் எனும் கூட்டுரிமை குடியிருப்பு கட்டடத்தின் 15வது மாடியில் ஒரு வீட்டில் தீ பற்றிக்கொண்டதாக நேற்று மாலை 5.55 மணிக்கு குடிமைத் தற்காப்புப் படைக்கு அழைப்பு கிடைத்தது.
சம்பவயிடத்துக்கு விரைந்த தீயணைப்பாளர்கள் பாதிக்கப்பட்ட வீட்டிலிருந்து கரும்புகை கிளம்புவதைக் கண்டனர்.
சம்பம் நடந்தபோது வீட்டில் நாயைத் தவிர வேறு யாரும் இல்லை. சம்பவத்தில் யாருக்கும் காயமில்லை என அதிகாரிகள் தெரிவித்தனர்.