செங்காங்கில் உள்ள கூட்டுரிமை வீட்டின் சமையலறையில் மூண்ட தீயை அணைத்ததுடன் அந்த வீட்டின் வரவேற்பறையில் இருந்த நாயையும் தீயணைப்பாளர்கள் மீட்டுள்ளனர். சம்பவத்தில் யாருக்கும் காயமில்லை.
இதன் தொடர்பில் ஏறக்குறைய 10 பேர் அந்த அடுக்குமாடிக் குடியிருப்பில் இருந்து வெளியேற்றப்பட்டனர். மீட்கப்பட்ட நாய் பின்னர் உரிமையாளரிடம் ஒப்படைக்கப்பட்டது.
காம்பஸ்வேல் போ புளோக் 53ல் அமைந்திருக்கும் 'த குவார்ட்ஸ்' கூட்டுரிமை வீட்டில் மூண்ட தீ குறித்து நேற்று முன்தினம் மாலை 5.55 மணியளவில் தகவல் கிடைத்ததாக சிங்கப்பூர்க் குடிமைத் தற்காப்புப் படை தெரிவித்தது.
தீ மூண்டபோது வீட்டில் யாரும் இல்லை என்று கூறப்பட்டது.