சிங்கப்பூரில் மேலும் இருவருக்கு குரங்கம்மை தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது. பாதிக்கப்பட்ட ஒருவர் சமூகத்தொற்றுக்கு ஆளானவர் என்று தெரிவிக்கப்பட்டது.
சமூகத்தொற்றுக்கு ஆளானவர் 54 வயதான ஆடவர் என்று சுகாதார அமைச்சு தெரிவித்தது. அவருக்கு தொற்று உறுதிசெய்யப்பட்ட 13வது நபருடன் தொடர்பு இருந்ததாகக் கூறப்பட்டது.
பாதிக்கப்பட்ட மற்றொருவர் 25 வயது ஆடவர். அவருக்கும் பாதிக்கப்பட்ட மற்றவர்களுக்கும் தொடர்பு இல்லை.
சிங்கப்பூரில் மொத்தம் 15 குரங்கம்மை சம்பவங்கள் பதிவாகியுள்ளன. பாதிக்கப்பட்ட அனைவரும் ஆண்கள்.
78 நாடுகளில் 18,000க்கும் மேற்பட்ட குரங்கம்மை சம்பவங்கள் பதிவாகியிருப்பதாக உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது.