முகக்கவசம் அணிவதன் தொடர்பிலான விதிமுறை உட்பட எஞ்சிய கொவிட்-19 கிருமிப் பரவல் கட்டுப்பாடுகளைத் தளர்த்த தற்போதைக்குத் திட்டம் இல்லை என்று சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.
கட்டுப்பாடுகள் மேலும் தளர்த்தப்படுமா என்று தன்னிடம் வந்த கேள்விக்கு சுகாதார அமைச்சு பதிலளித்தது.
தற்போதைய கொவிட்-19 கிருமிப் பரவல் அலை உச்சத்தைத் தாண்டிவிட்டபோதும் பதிவாகிவரும் கிருமித்தொற்று சம்பவங்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகமாக இருப்பதாகவும் அதனால் அபாயம் உள்ளதாகவும் அமைச்சு கூறியது.
நிலைமைக்கு ஏற்றவாறு கட்டுப்பாடுகள் தொடர்ந்து மாற்றியமைக்கப்படும் என்றும் அது சொன்னது.
சிங்கப்பூரில் தற்போது உள்ளரங்குகளிலும் பொதுப் போக்குவரத்துச் சேவைகளைப் பயன்படுத்தும்போதும் கட்டாயமாக முகக்கவசம் அணியவேண்டும்.